Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 செப்டம்பர், 2019

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

Related image

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


அனைத்து வைட்டமின்களையும் கொண்ட சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

தேவையான பொருள்கள்:
  • ஆட்டுக்கால் மூன்று 
  • கத்திரிக்காய் நான்கு 
  • புளி 1 சிறிய எலுமிச்சை அளவு
  • வெள்ளை கொண்டைக்கடலை 1 கப்
  • இஞ்சி, பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  • துருவிய தேங்காய் 5 மேஜைக்கரண்டி
  • பூண்டு 4 பல்
  • சின்ன வெங்காயம் 6 
  • சீரகத் தூள் 1 மேஜைக்கரண்டி
  • மஞ்சள் தூள் 1 மேஜைக்கரண்டி
  • மிளகாய்த்தூள் 2 மேஜைக்கரண்டி
  • தக்காளி 2 
  • மல்லித் தூள் 3 மேஜைக்கரண்டி
  • வெல்லம் சிறிதளவு 
  • கருவேப்பிலை தேவையான அளவு 
  • கருவடகம் 1 தேக்கரண்டி
  • எண்ணெய் 6 மேஜைக்கரண்டி
  • உப்பு தேவையான அளவு 

செய்முறை:
  • ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து குக்கரில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மூடி வைத்து ஒரு விசில் வந்த மாத்திரத்தில் அடுப்பை சிம்மில் வைத்து சுமார் இருபது நிமிடம் வேக வைக்கவும்.
  • பின்னர் கொண்டைக்கடலையையும் குக்கரில் இதனைப் போல் சுமார் பதினைந்து நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியையும், தேங்காயையும் தனித்தனியாக ஒன்று கலக்காமல் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  • இப்போது நன்கு வெந்த கடலையை அகல பாத்திரத்தில் தண்ணீருடன் ஊற்றி, அதனுடன் வெந்த ஆட்டுக்காலையும் தண்ணீர் இல்லாத படி சேர்த்து மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூளில் பாதியையும், அரைத்த தக்காளியில் ஒரு ஸ்பூன் அளவு தனியே வைத்து விட்டு மீதியை இதில் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • நன்றாக ஒரு கொதி வந்த மாத்திரத்தில், கத்திரிக்காயை நீளவாக்கில் நான்காக அறிந்து அதனுடன் சேர்த்து மூடி நன்றாக வேகவிடவும்.
  • கத்திரிக்காய் இப்போது நன்றாக வெந்த மாத்திரத்தில் புளியை கரைத்து ஊற்றி தேங்காய் விழுதையும் சேர்த்து மூன்று நிமிடம் நன்கு கொதிக்கவிடவும்.
  • பின்னர் இந்தக் குழம்பை இறக்கி வைத்து விட்டு, தாளிக்க வேறு ஒரு வாணலியை எடுத்து அதில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி நன்கு சுட வைத்து, கருவடகம் (கருவடகம் இல்லை என்றால் வெந்தயம், கடுகு போட்டு தாளித்துக் கொள்ளலாம்) போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டையும் உடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • நன்கு வதங்கிய மாத்திரத்தில் எடுத்து வைத்த தக்காளி விழுது, வெல்லம், கருவேப்பிலை ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து சுமார் இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • பின்னர் மிளகாய்த் தூளையும் சேர்த்து வதக்கி விட்டு நன்கு கொதித்த குழம்பை இதில் ஊற்றவும். பின்னர் ஒரு கொதி கொதித்த மாத்திரத்தில் இறக்கி விடவும்.
  • இதோ சுவையான சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு தயார்.
  • இறைச்சி இதயத்தை பலம் பெறச் செய்யும். ஏனென்றால் மட்டனில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளது. இதனால் இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக