>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 19 செப்டம்பர், 2019

    மாரடைப்பை தடுக்கும் வெள்ளை சோள மாவு தோசை!

    Image result for மாரடைப்பை தடுக்கும் வெள்ளை சோள மாவு தோசை!
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    இன்றைய காலத்தில் பெரும்பாலானோருக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம், நம் ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளே என பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்ம உண்ணும் உணவு முழுவதும் செரித்து விட்டால், நமக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது. 

    மாறாக முதலில் ஏற்படும் செரிமான கோளாறு தான் அத்தனை வியாதிகளுக்கும் அஸ்திவாரமே. இதை ஆரம்பத்திலேயே சரி செய்து விட்டால், கொழுப்புகள் சேர்வதை தடுப்பதோடு, ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பின் மூலம் ஏற்படும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகியவை நம்மை அண்டாமல் தவிர்க்கலாம். 

    வரும் முன் காப்போம் என்பதை நினைவு கூர்ந்து, உணவே மருந்து என்பதை செயல்படுத்தி, நம் உடலை பிணிகளில் இருந்து பாதுகாப்போம். அதற்கான உணவு வகைகளை தொடந்து பார்ப்போம். 

    செரிமானத்தை அதிகரித்து, கொழுப்புகளை கரைத்து, ரத்த சர்க்கரை அளவை சமன்படுத்தி, கால்சியம், இரும்பு சத்து, புரதம் ஆகியவற்றை அள்ளி தரும் அருமருந்தாம் வெள்ளை சோளத்தில், தோசை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்: 
    • பச்சரிசி, 
    • வெள்ளை சோளம், 
    • உளுந்து, 
    • வெந்தயம். 
    செய்முறை: 
    மூன்று பங்கு வெள்ளை சோளம், ஒரு பங்கு பச்சரிசியுடன் சேர்த்து அதில் நீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொரு பத்திரத்தில், ஒரு பங்கு உளுந்தம் பருப்புடன், சிறிதளவு  வெந்தயம் சேர்த்து தண்ணீரில் ஊற வைக்கவும். 

    4 மணி நேரத்திற்குப் பின் இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து, தேவையான அளவு உப்பு போட்டு புளிக்கும் வரை காத்திருக்கவும். பின் அதை வழக்கமான முறையில் தோசையாக வார்த்து எடுக்கவும். 

    தேங்காய், தக்காளி, வெங்காயம் போன்ற எந்த சட்னியும் தொட்டு சாப்பிடலாம். சைடு டிஷ் உங்கள் இஷ்டம்தான். இதே மாவில் பணியாரமும் கூட செய்து சாப்பிடலாம்.

    பலன்: வெள்ளை சோளத்தில் 48 சதவீதம் நார் சத்து இருப்பதால், இது சிறந்த கொழுப்பு கரைப்பானாக செயல்படுகிறது. இதில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள், எலும்பை உறுதி படுத்துகின்றன. செரிமான மண்டலத்தை தூண்டி, உணவின் சத்துக்களை உடல் கிரகிக்க வைப்பதால், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. 

    இதனால், வெள்ளை சோளத்தை நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதால், மாரடைப்பு, ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய் போன்றவை நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ளலாம். 

    அதுமட்டுமின்றி, ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்வதால் வயது முதிர்ந்த தோற்றத்தை தடுத்து, இளமையான தோற்றம் பெற வழிவகை செய்கிறது. புற்றுநோய் காரணிகளையும் வெள்ளை சோளம் தடுத்து நிறுத்துவதால் சிறந்த நோய் தடுப்பு மருந்தாகவும், இந்த உணவு செயலாற்றுகிறது. 

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக