>>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 5 செப்டம்பர், 2019

    கிய்யா கிய்யா குருவி...!

     Image result for கிய்யா கிய்யா குருவி...!

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    கிராமப்புறங்களில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஆடிப்பாடி விளையாடும்போது மற்றவர்களை பற்றிய புரிதல் தன்மையும், ஒற்றுமையும் ஏற்படும்.

    குழந்தைகளின் விருப்பப்படி அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாடும்போது, அவர்களின் மனதிற்கு புதுவிதமான கற்பனைகளையும், நல்ல உற்சாகத்தையும் தரும்.

    இன்று சிறுவர், சிறுமியர்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்றான அவர்களின் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் கிய்யா கிய்யா குருவி விளையாட்டை பற்றி பார்க்கலாம்.

    எத்தனை பேர் விளையாடலாம்?

    5 நபர்கள்

    எப்படி விளையாடுவது?

    முதலில் குழந்தைகள் அனைவரும் மைதானத்தின் நடுவில் ஒரு குழுவாக நின்று கொள்ள வேண்டும்.

    புதரில் பறவை சிக்கிக் கொண்டால் அவை பறந்து வெளியே வரும்போது சிறகு ஒடிந்துவிடும். இந்த சிறகு ஒடிந்த குருவி அதற்கு கூடு கட்டிக் கொள்ள மரங்களைப் பார்த்து இடம் கேட்பது போல் நடிக்க வேண்டும்.

    இவ்வாறு நடித்துக் காட்டும்போது சிறகு ஒடிந்த குருவியாக ஒருவரை தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆலமரம், தென்னைமரம், பனைமரம், வாழைமரம் என்று நான்கு நபர்களை தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு சிறகு ஒடிந்த குருவியாக இருக்கும் நபர், மரமாக இருக்கும் நான்கு நபர்களை பார்த்து எனக்கு 'மழைக்காலத்தில் கூடு கட்ட இடம் தருவாயோ" என்று கேட்க வேண்டும்.

    அந்த மரங்களில் வாழைமரம், தென்னைமரம், பனைமரம் ஆகிய மூன்றும் இடம் தராதது போலவும், ஆலமரம் மட்டும் இடம் தருவது போலவும் உரையாடி விளையாட வேண்டும்.

    கிய்யா கிய்யா குருவி நான்,

    சிறகொடிந்த குருவி நான்,

    வாழைமரமே வாழைமரமே

    மழைக்காலத்தில் கூடு கட்ட இடம் தருவாயோ

    வாழைமரம்....

    இடம் தரமாட்டேன்....

    தென்னைமரமே தென்னைமரமே

    மழைக்காலத்தில் கூடு கட்ட இடம் தருவாயோ

    தென்னைமரம்....

    இடம் தரமாட்டேன்....

    பனைமரமே பனைமரமே

    மழைக்காலத்தில் கூடு கட்ட இடம் தருவாயோ

    பனைமரம்....

    இடம் தரமாட்டேன்....

    ஆலமரமே ஆலமரமே

    மழைக்காலத்தில் கூடு கட்ட இடம் தருவாயோ

    ஆலமரம்....

    இடம் தருகிறேன்....
    இவ்வாறு குழந்தைகள் விளையாடும்போது பாடல்களை பாடிக் கொண்டு தொடர்ந்து விளையாடுவார்கள்.

    பலன்கள் :

    நடிப்புத்திறன் வெளிப்படும்.

    குழு ஒற்றுமையை ஏற்படுத்தும்.

    புரிந்துக்கொள்ளும் மனப்பான்மை உண்டாகும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக