>>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 11 செப்டம்பர், 2019

    அழகாக காட்சியளிக்கும்.. சிவப்பு கடல்..!

    Image result for சிவப்பு கடல்..!


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    இயற்கை வளங்களைப் பார்த்தாலே மனிதர்கள் எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று கூறலாம்.

     ஒரு சில இடங்கள் கண்ணைப் பறிக்கும் வகையில் வித்தியாசமாகவும், அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் நமக்கு தோற்றமளிக்கும்.

     அதுபோல கடலில் இருக்கும் இயற்கை காட்சிகள் ஏராளம் என்று கூறலாம். பொதுவாக கடலில் இருக்கும் நீர் நீல வண்ணத்தில்தான் இருக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

     ஆனால், இந்த கடல் பார்பதற்கு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான். இன்று நாம் அந்த அதிசயமான கடலைப் பற்றி பார்க்கலாம்.

    எங்கே இருக்கிறது இந்த சிவப்பு கடல்?

     சீனாவில் பஞ்சின் என்ற இடத்தில் இயற்கையை ஈர்க்கக்கூடிய மற்றும் புகழ் வாய்ந்த இடமாக திகழ்கிறது இந்த சிவப்பு கடல்.

     இந்த ஆழமற்ற கடல் ஒரு சிவப்பு புல் பேரினம் ஆகும். இவை ஆழமற்றதாகவும், அலையுள்ள நிலப்பகுதிகளாகவும் தோற்றங்களை ஏற்படுத்துகின்றன.

     இது ஒரு பெரிய நிலங்களிலும், கோரைப்புல்களான (பாசி) தண்ணீரோடு கலந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.

    இதன் அதிசயம் என்னவென்றால் கடலில் உள்ள நீர் சிவப்பாக இருப்பதில்லை. அதன் மீது இருக்கும் இந்தக் கோரைபுற்கள் பச்சை நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறி நாம் பார்ப்பதற்கு ஒரு சிவப்புக் கடலாக காட்சியளிக்கிறது.

     சிவப்பு கடல் எல்லா கடல்களை போலவே காட்சியளிக்கும். ஆனால் குறிப்பிட்ட மாதத்தில் பச்சையாக இருக்கும் கோரைப் புற்கள், சில மாதங்களுக்கு பிறகு அடர் சிவப்பு வண்ணமாக மாறி உலகின் அழகிய கடற்கரையாகவும் நமக்கு காட்சியளிக்கும்.

     பிறகு அடர் சிவப்பிலிருந்து, இளஞ்சிவப்பு நிறமாக மாறி காய்ந்து விடுகின்றன. சில மாதங்களில் அந்த கோரைப்புல் மீண்டும் முளைக்கிறது.

    ஏன் இந்தக் கடல் சிவப்பாக இருக்கிறது?

     அதற்கு காரணம் இயற்கையாகவே கோரைப்புல் சிவப்பாக மாறிவிடும் மற்றும் அந்தக் கடலில் உள்ள உப்பு, காரத்தன்மையின் காரணமாக சிவப்பு நிறத்தை தருகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    தனித்துவம் வாய்ந்த இந்த அழகிய கடற்கரையை மிக கவனமாக பாதுகாத்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகளை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பாலங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக