Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கூடுதல் வட்டி உங்களுக்கு கிடைச்சுருச்சா? பிஎப் கணக்கைப் பாருங்க...


 

 

 

 

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 

தொழிலாளர் நலத்துறை பிப்ரவரி மாதம் 8.65 சதவீதம் வட்டி வழங்க பரிந்துரைத்தது. நிதி அமைச்சகம் அதனை மறுபரிசீனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

கூடுதல் வட்டி உங்களுக்கு கிடைச்சுருச்சா? பிஎப் கணக்கைப் பாருங்க...
ஹைலைட்ஸ்
  • தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி 8.65% வழங்க அரசு ஒப்புதல்.
  • வட்டியை உயர்வால் அரசுக்கு ரூ.151.67 கோடி வரை நிதிச்சுமை ஏற்படும்.
2018-19ஆம் ஆண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2017-18 நிதி ஆண்டில் தொழிலாளர் வைப்பு நிதிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைவான அளவாக 8.55 சதவீதம் வட்டி மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆண்டு வட்டி விகிதம் உயர்த்தப்படும் என சுமார் 6 கோடி தொழிலாளர்களின் எதிர்பார்த்தனர்.

தொழிலாளர் நலத்துறையும் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனமும் பிப்ரவரி மாதம் 8.65 சதவீதம் வட்டி வழங்க பரிந்துரைத்தன. நிதி அமைச்சகம் அதனை மறுபரிசீனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால், தொழிலாளர் நலத்துறையும் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனமும் தனது முடிவில் உறுதியாக இருந்தன.

இதனால், வட்டி வழங்குவது தாமதித்துக்கொண்டே சென்றது. இதனிடையே, புதன்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார், “எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு முன்பாக 2018-19 நிதி ஆண்டுக்கான வட்டி 8.65 சதவீதம் வழங்கப்பட்டுவிடும்" என்று கூறினார்.


இந்நிலையில், அரசு 8.65 சதவீதம் வட்டியை கொடுக்க சம்மதம் தெரிவித்துவிட்டது என்றும் 6 கோடி இபிஎப் கணக்குதாரர்களுக்கும் இந்த அளவுக்கு வட்டி டெபாசிட் செய்யப்படுவிடும் என்றும் அரசுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வட்டியை உயர்வால் அரசுக்கு ரூ.151.67 கோடி வரை நிதிச்சுமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் இ.பி.எப். (EPF) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (Employee Provident fund) வழங்கும். பொதுவாக இது மாதம் தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது பி.எப். கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குக்கு ஆண்டுதோறும் எவ்வளவு வட்டி வழங்குவது என்பதை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ.), தொழிலாளர் நல அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகியை முடிவு செய்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!