Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 12 செப்டம்பர், 2019

ஏமாற்றாதே, ஏமாறாதே..!

 Image result for ஏமாற்றாதே, ஏமாறாதே..!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



  ஒரு ஊரில் ராமசாமி என்ற சுயநலம் கொண்ட செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஊருக்கு சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். இதனால் வருத்தமடைந்த செல்வந்தர் தனது நண்பர் மணியிடம் நடந்ததை கூறி புலம்பினார்.

சில நாட்கள் கழித்து மணி ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியுடையது என தெரிந்துகொண்ட மணி அதை அவரிடம் கொடுத்தார்.

மணியிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ராமசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தார். அவன் மணியிடம், நான் இந்த பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்த பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளது. அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை திருப்பி தரவேண்டுமென மணியிடம் கூறினார்.

மணியோ மிகவும் நல்லவர். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். இதனால் இந்த குழப்பத்திற்கு முடிவுகட்ட நண்பர்கள் இருவரும் ஊர் தலைவரிடம் சென்றனர். விவரத்தை கேட்ட ஊர் தலைவர், ராமசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களை தொலைத்தாய் என கேட்டார். அதற்கு அவர் 40 தங்க நாணயங்கள் என பொய் கூறினார்.

இப்போது ஊர் தலைவர் மணியை பார்த்து நீ எவ்வளவு தங்க நாணயங்களை கண்டுபிடித்தாய் என்றார். அதற்கு அவர் 30 தங்க நாணயங்கள் என்றார்.

இருவரின் பதிலையும் கேட்ட ஊர்த்தலைவர் ராமசாமியை பார்த்து, மணி கண்டறிந்திருப்பது வெறும் 30 தங்க நாணயங்கள், நீ தொலைத்திருப்பதோ 40 தங்க நாணயங்கள் எனவே இது உன்னுடையதாக இருக்க முடியாது. இனி யாராவது 40 தங்க நாணயங்களை கொண்டுவந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன், இப்போது நீ கிளம்பலாம் என்றார்.

இப்போது மணியை பார்த்த தலைவர் நீ கண்டுபிடித்திருப்பது ராமசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துகொள்ளலாம் என்று கூறிவிட்டார். திருடனுக்கு தேள் கொட்டிய கதை போல, ஊர்த்தலைவரின் தீர்ப்பை கேட்ட ராமசாமிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த சங்கடத்தை எண்ணி வருத்தப்பட்டார்.

தனது தவறை உணர்ந்த அவர், இனிமேல் யாரையும் ஏமாற்றாமல் நேர்மையான மனிதராக வாழவேண்டும் என்று முடிவுசெய்தார்.

நீதி :

யாரையும் ஏமாற்றாதே... நீயும் ஏமாறாதே... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக