>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 6 செப்டம்பர், 2019

    உலகத்தை மாற்ற முடியுமா...?

     Image result for உலகத்தை மாற்ற முடியுமா...?
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


      ஒரு ஊரில் மாயவன் என்ற பணக்காரர் இருந்தார். அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் இருந்தார். ஒருநாள் அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. அதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பல ஊர்களிலிருந்து மிகப்பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தார்கள். அதிகப்படியான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டார், இருந்தாலும் அவருக்கு அந்தத் தலைவலி குணமாகவே இல்லை.

    ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவரிடம் அந்த பணக்காரர் தலைவலியை சரி செய்வதற்கு ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார். அந்த துறவியும் அவரை பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்கு கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.

    கண்ணில் உள்ள குறைபாட்டை குணப்படுத்த ஒரே ஒரு வழிதான் உள்ளது என்றார். என்னவென்றால், அந்த பணக்காரர் பச்சை நிறத்தைத் தவிர வேறு எந்த நிறத்தையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் சென்றுவிட்டார்.

    அதனால், பணக்காரர் முதலில் தன் வீட்டிலிருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினார். சிறிது நாட்களில் தலைவலி குணமாகிவிட்டது. துறவி கூறியது சரிதான் என்று நினைத்து மனதிற்குள் அவருக்கு நன்றி கூறினார்.

    இப்போது தலைவலி சரியாகிவிட்டதால், வீட்டைவிட்டு வெளியே செல்லத் தொடங்கினார். ஆனால், வெளியே சென்றால் மற்ற நிறங்களையும் பார்க்க வேண்டியிருக்கும். ஏனென்றால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளிக் கொடுத்துள்ளது.

    ஆனால், அவற்றையெல்லாம் அவர் பார்க்கக்கூடாதே! அதனால், சில ஆட்களை நியமித்து பிரஷ்ஷையும், நிறையப் பச்சை நிறப் பெயிண்டையும் அவர்களிடம் கொடுத்து, அவர் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர்கள், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி என எல்லாவற்றிற்கும் பச்சை நிறத்தை அடிக்கும்படி உத்தரவிட்டார்.

    அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள். சில மாதம் கழித்து மீண்டும் அந்த துறவி அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரையும் தடுத்து நிறுத்தி, அவர் மீது பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள். துறவிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆச்சரியமாக அவர்களை பார்த்து ஏன் பச்சை வண்ணம் அடிக்கிறீர்கள் என்று அதற்கான காரணத்தை கேட்டார்.

    அவர்கள் தங்கள் முதலாளியின் கட்டளை இது என்று கூறினார்கள்.

    அதற்கு துறவி, என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

    பணக்காரருக்கு, தன் நோயைக் குணப்படுத்திய துறவி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி.! வந்தவரை வணங்கி அவரை உபசரித்தார்.

    இந்த ஊரில் எல்லாவற்றிற்கும் ஏன் பச்சை வண்ணம் அடிக்கிறீர்கள்? என்று துறவி கேட்டார்.

    ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன் என்று மிகப்பணிவோடு கூறினார்.

    நான் என்ன சொன்னேன்? என்று துறவி கேட்டார்.

    பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா! என்று கூறினான்.

    அதற்கு துறவி, மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம். ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியுள்ள பொருட்களெல்லாம் பச்சையாகவே தெரிந்திருக்கும். உன்னுடைய பணமும் வீணாகி இருக்காது.

    உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சை வண்ணம் அடிக்கமுடியுமா? என்று துறவி கேட்டார். அதற்கு பதில் கூற முடியாமல் அந்த பணக்காரர் தலைகுனிந்து நின்றார்.

    நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரரைப் போல்தான் வாழ்கிறோம். நம்மைத் திருத்திக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைக்க வேண்டும் என்று மிகவும் முயற்சிக்கிறோம்.

    அது சாத்தியமானது அல்ல. அதிக காலமும், உழைப்பும் விரயமான பின்புதான், திருந்த வேண்டியது நாம்தான் என்பதை புரிந்து கொள்கிறோம்.!!!


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக