>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 14 செப்டம்பர், 2019

    எழில்மிகு... கேத்தரின் நீர்வீழ்ச்சி...!!

    Image result for கேத்தரின் நீர்வீழ்ச்சி...!!

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    கோடைகாலம் வந்தவுடன் நாம் நினைப்பது குழந்தைகள், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்பதுதான்.
      அந்த வகையில் சுற்றுலா செல்ல குளுமையான ஒரு இடத்தைத்தான் அதிகம் தேர்ந்தெடுத்து நாம் சென்று வருவோம்.
      அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ஒரு அழகிய, குளுமை நிறைந்த இடம்தான் கேத்தரின் (ஊயவாநசiநெ) நீர்வீழ்ச்சி.
      நீலகிரியிலிருந்து ஏறத்தாழ 53கி.மீ தொலைவிலும், அரவேணுவிலிருந்து ஏறத்தாழ 5கி.மீ தொலைவிலும், ஊட்டியிலிருந்து ஏறத்தாழ 40கி.மீ தொலைவிலும், கோத்தகிரியிலிருந்து ஏறத்தாழ 7கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள எழில்மிகு இடம்தான் கேத்தரின் நீர்வீழ்ச்சி.
     சிறப்புகள் :
      நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் அருவி இது.
      இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால் ஆண்டின் அனைத்து நாட்களிலும் தண்ணீர் மிக மிக குளிர்ச்சியாக வந்து கொண்டிருக்கும்.
      கோடைகாலங்களில் அப்பகுதியில் உள்ள நீரோடை வற்றினாலும், இந்த அருவி மட்டும் வற்றுவதே இல்லை. காரணம் அருவியின் இருபுறமும் எஞ்சியிருக்கும் மரங்கள், காடுகள், சதுப்பு நிலங்கள், புல்வெளிகள்தான்.
     கோத்தகிரியின் முதன்மையான சுற்றுலா தலமான இது, மிக உயரமான இடத்திலிருந்து தரையில் வந்து விழுகிறது.
       இந்த அருவியை முழுமையாக பார்க்கவேண்டுமானால் டால்பின் மூக்கு என்ற இடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும்.
      அழகான இந்த அருவிக்கு செல்லும்போது சாலை நெடுகிலும் உள்ள தேயிலை செடிகள் மற்றும் மரங்களின் அழகை ரசித்துக் கொண்டே செல்ல முடியும்.
     மனதையும், உடலையும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த பகுதிக்கு போகலாம். குளிர்மையான சூழ்நிலையில் குளிரான நீரில் குளிப்பது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும்.
     எப்படி செல்வது?
     நீலகிரிக்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. நீலகிரியிலிருந்து கோத்தகிரிக்கு பேருந்து மற்றும் வாடகை வாகனங்களின் மூலம் செல்லலாம்.
     எங்கு தங்குவது?
     நீலகிரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
     இதர சுற்றுலாத்தலங்கள் :
    •  நேரு பூங்கா.
    • கொடநாடு வியூ பாயிண்ட்.
    • எல்க் நீர் வீழ்ச்சி.
    • லாங்வுட் ஷோலா.
    • ஸ்நௌடன் சிகரம்.
    • நீலகிரி அருங்காட்சியகம்.
    • ரங்கசாமி தூண் மற்றும் சிகரம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக