Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இனிமேலும் இப்படி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டா கம்பி தான்..

 

Image result for tiktok

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 

கஞ்சா, கத்தி மற்றும் போதை மாத்திரைகளை வைத்து டிக் டாக்கில் வீடியோ பதிவிட்ட சென்னை வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பொழுதுபோக்கிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட டிக் டாக் செயலி தற்போது குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான மைதானமாக மாறிக் கொண்டு வருகிறது. இணையத்தில் டிக் டாக் என்று தேடினால் கூட க்ரைம் செய்திகளை வரிசையிட்டு காட்டுகிறது நமது கூகுள்.

சென்னையில் கஞ்சா, போதை மாத்திரை மற்றும் கொலையாளிகள் பயன்படுத்தும் பயங்கர கத்திகளுடன் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட வாலிபரை புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் தயாநிதி. இவர் டிக் டாக்கில் தனது பெயரிலேயே கணக்கு ஒன்றை தொடங்கி அதில் தொடர்ச்சியாக இது போன்று வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார்.


க்ரைம் செய்திகளை தொடர்ச்சியாக வெளிச்சமிட்டு காட்டி வரும் தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் தயாநிதியின் வீடியோவும் இடம்பிடித்தது. இதனை பார்த்த சூரப்பேட்டையை சேர்ந்த ராஜா என்பவர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் தயாநிதி வெளியிட்டிருந்த வீடியோக்களை ஆய்வு செய்தனர். அதில் அவர் பயன்படுத்தியிருந்த பைக்கின் நம்பரைக் கொண்டு சோதனை செய்ததில் தயாநிதியின் முகவரி தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூரில் பதுங்கியிருந்த அவரை அம்பத்தூர் போலீசார் கைது செய்தனர்.

அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் வீடியோவில் பயன்படுத்தியிருந்த பட்ட கத்திகளைச் செய்து கொடுத்தது சூரப்பேட்டையை சேர்ந்த ராமு என்று தெரிய வந்தது. இவரையும் கைது செய்த போலீசார் தங்களது கஸ்ட்டடியில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக