>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 7 செப்டம்பர், 2019

    ரூபாய் நோட்டுகளில் அளவை மாற்றும் எண்ணம் இல்லை -RBI!

    ரூபாய் நோட்டுகளில் அளவை மாற்றும் எண்ணம் இல்லை -RBI!


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    ரூபாய் நோட்டுகளின் அளவை எதிர்காலத்தில் மாற்றியமைக்கும் எண்ணம் இல்லை என மும்பை உயர்நீதிமன்றத்தில், இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது!
    தலைமை நீதிபதி பிரதீப் நந்த்ராஜோக் மற்றும் நீதிபதி பாரதி டாங்க்ரே ஆகியோரின் உயர்நீதிமன்ற அமர்வு கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக வங்கி ஒழுங்குமுறையை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த வழக்கறிஞர் வி.ஆர்.தோண்ட் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
    முன்னதாக பார்வையற்றோருக்கான தேசிய சங்கம் (NAB) சார்பில் மும்பை உய்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (PIL) ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் ‘புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை அடையாளம் காண்பதில் பார்வையற்றோர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர், பார்வைக் குறைபாடுள்ளவர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களில் தனித்துவமான அம்சங்களைச் சேர்க்குமாறு’ மனுதாரர் அமைப்பு ரிசர்வ் வங்கிக்கு வழிகாட்டுதல்களைக் கோரியது. இந்த மனுவினை நீதிபதி பிரதீப் நந்த்ராஜோக் மற்றும் நீதிபதி பாரதி டாங்க்ரே ஆகியோரின் உயர்நீதிமன்ற அமர்வு விசாரித்தது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.
    இதனைத்தொடர்ந்து வங்கி ஒழுங்குமுறையை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த வழக்கறிஞர் வி.ஆர்.தோண்ட் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். தோண்ட் தாக்கல் செய்த அறிக்கையை ஆராய்ந்த நீதிபதிகள் அமர்வு., ரூபாய் நோட்டுகளின் அளவைத் தக்கவைத்துக்கொள்வது, பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கு ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண உதவும் என்று தெரிவித்தது.
    இதனிடையே., ‘நாணயம், ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அடையாளம் காண பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு உதவுவதற்காக ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்டு வரும் மொபைல் பயன்பாட்டின் பீட்டா (சோதனை) பதிப்பு நவம்பர் 1-ஆம் தேதி கிடைக்கும்’ என்று தோண்ட் சுட்டிக்காட்டினார். இதன் பின்னர், வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 4-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக