Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 16 அக்டோபர், 2019

பிரியாணியில் நெளிந்த புழுக்கள்... வாடிக்கையாளர் அதிர்ச்சி...!!



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் பறிமாறப்பட்ட பிரியாணியில் புழு நெளிந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் இருக்கும் ஒரு உணவகத்தில் சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகள் பறிமாறப்படுகிறது. இங்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அதில் புழுக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். சுகாதாரமற்ற முறையில் பிரியாணி தயாரித்தது தவறு என்பதை ஒப்புக் கொள்ளாமல், வேறு உணவு தருவதாக கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, பாதிப்படைந்த வாடிக்கையாளர் சிக்கன் பிரியாணியை படம் பிடித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு அனுப்பி, புகாரும் அளித்துள்ளார்.

கோழி இறைச்சி விற்ற கடைதான் இதற்குக் காரணம் என்று அந்தக் கடை மீது திருநின்றவூர் காவல்நிலையத்தில் உணவகம் சார்பில் புகார் அளித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பழைய இறைச்சிகளை வாங்கி ஓட்டலில் பிரியாணி செய்வதால்தான் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது என்று வாடிக்கையாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!