Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 அக்டோபர், 2019

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய ஒப்பந்தம்..!

Image result for பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய ஒப்பந்தம்..!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி எஸ் என் எல்) நிறுவனம் தற்போது யப் டீவி உடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டார்கள். இந்த புதிய ஒப்பந்தத்தின் படி, பி எஸ் என் எல் நிறுவனத்தின் அகண்ட அலை வரிசை (பிராட்பேண்ட்) வாடிக்கையாளர்கள் யப் டீவியின் சினிமா மற்றும் ஆன்லைன் கண்டெண்ட்களைக் கண்டு களிக்க முடியுமாம்.
யப் டீவி, நெட் ஃப்ளிக்ஸ் போல ஒரு இணைய டீவி தான். இந்த சேனலில் சுமார் 12 மொழிகளில் கண்டுகளிக்க பொழுது போக்கு கண்டெண்ட்கள் இருக்கிறதாம். அதோடு யப் ஃப்ளிக்ஸ் என்கிற பெயரில் கூட சினிமாக்களை வழங்கி வருகிறது.
இந்த பி எஸ் என் எல் மற்றும் யப் டீவி ஒப்பந்தத்தால், தற்போது 2.5 ஜி, 3ஜி, 4ஜி அலை வரிசைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு யப் வீடி தன் சேவைகளை வழங்க முடியுமாம்.
பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு சுமார் 120 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். யப் டிவி நிறுவனமோ உலக தரத்திலான கண்டெண்ட்களைக் கொண்டு வருகிறார்கள். எனவே நாங்கள் ஒரு புது விகிதத்தில் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு, ஒரு வலுவான தொழில்நுட்பத்துடன், நல்ல அனுபவத்தைக் கொடுக்கப் போகிறோம் என பி எஸ் என் எல் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள்.
கண்டெண்ட் தான், டேட்டா நுகர்வை அதிகரிக்கச் செய்யும் முக்கியக் காரணி. அதிலும் ஒரிஜினல் கண்டென்ட் தான் இன்றைய வியபாரத்தை தீர்மானிக்கிறது எனச் சொல்லி இருக்கிறார்கள் யப் டீவி தரப்பினர்கள்.
யப் டீவி உடனான ஒப்பந்தங்களால், மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பி எஸ் என் எல் நிறுவனம், அதிக போட்டி நிறைந்த இந்திய டெலிகாம் சந்தையில், மீண்டும் தன் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டு முன்னேற உதவும், தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வருவாயையும் ஈட்ட உதவும் எனச் சொல்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் 2016-ல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, தன் டெலிகாம் சேவையைத் தொடங்கியதில் இருந்து, டெலிகாம் நிறுவனங்கள் மேலே சொன்னது போல கண்டெண்ட் முறையைக் கடை பிடிக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. காரணம் ஜியோ வருகைக்குப் பின் கிடைக்கும் மலிவு விலை டேட்டா. எல்லா டெலிகாம் நிறுவனங்களும் மலிவு விலைக்கு டேட்டா கொடுக்கத் தொடங்கியதில் இருந்து, டேட்டா பேக்குகளுக்கான விலை அர்த்தமற்றது ஆகிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!