Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 அக்டோபர், 2019

தேவகியை கொல்ல முயன்ற கம்சன் !!

 Image result for தேவகியை கொல்ல முயன்ற கம்சன் !!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


நரகாசுரன் : பூமியை பாயாகச் சுருட்டிய ஹிரண்யாக்ஷன்... வராக அவதாரம் எடுத்த திருமால்..!!

அசரீரி கூறியதைக் கேட்ட கம்சன், போஜ குலத்தின் இளவரசனான என்னை பெயரிட்டு அழைப்பது யார்? நான் செய்யும் செயலை தடுத்து நிறுத்திய மாயக்குரலே! யார் நீ? என்று கேட்டார்.

இதை எதிர்பார்த்தது போலவே அவ்விடம் அதிரும் வகையில் ஒரு சிரிப்பொலி உண்டாகியது. உன்னை அழிக்கும் வல்லமை கொண்ட ஒரு வீரனை பெற்றெடுக்கும் உனது சகோதரிக்கு தேரோட்டி மகிழ்கின்றாயா? உன்னை போன்றதொரு மூடனை இதுவரை யாவரும் கண்டிருக்க இயலாது என்றும், நீயே அந்த எமனை தேரோட்டி அழைக்கின்றாய் என்றும், உனது உயிரைப் பறிக்கக்கூடியவன் உனது தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை எனக் கூறி அடங்கிவிட்டது.

திருமாலைத் தேடி பாதாளம் நோக்கி செல்ல முனைந்த ஹிரண்யாக்ஷன் வழி தெரியாமல் தவித்து வந்த சூழலில் இறுதியில் தனது பாதைக்கு தடையாக இருந்த பூமியை பாயாகச் சுருட்டி மறைந்தது. அதைக் கண்டதும் அனைத்து தேவர்களும் ஸ்ரீநாராயணனிடம் சென்று முறையிட்டு இதற்கு ஒரு தீர்வு அளிக்க வேண்டும் என வேண்டினார்கள். பூமாதேவியும், உயிரினங்கள் வாழும் பூமியை ஹிரண்யாக்ஷன் பாயாக மடித்து சென்றமையால் அவைகள் என்னவாயிற்று என்றே தெரியாமல் திருமாலை எண்ணி பிரார்த்தனை செய்து, அவர்களை காக்க வேண்டும் என்று வேண்டி கொண்டிருந்தார்.

பிரபஞ்சத்தை காப்பவரான திருமால் வராக அவதாரம் எடுத்து குர்குர் என்று சப்தம் செய்து ஹிரண்யாக்ஷனுடன் போருக்கு சென்றார். பூமியை பாயாகச் சுருட்டிய ஹிரண்யாக்ஷன் மீது பாய்ந்து தன் தந்தத்தால் அதாவது கோரைப் பல்லால் குத்தி காயப்படுத்தினார்.

திருமாலின் இந்த எதிர்பாராத தாக்குதலால் சற்று நிலை தடுமாறி பின் அவ்விடம் விட்டு மறைந்து சமுத்திரத்தில் சென்று மறைய தொடங்கினான் ஹிரண்யாக்ஷன். மறைய தொடங்கும் தருவாயில் வராகம் அவனது கால்களை பற்றி மறுபடியும் தனது கூர்மையான தந்தத்தால் குத்தி அவன் உயிரை எடுத்தது.
அதுவரை தனது தங்கையின் மீது மிகுந்த பாசமும், அன்பும் கொண்ட கம்சன் தனது கரங்களில் வாளை ஏந்தி தனது தேரில் இருந்த தனது தங்கையை கொல்ல முற்பட்டார். அப்பொழுது வசுதேவர், கம்சனிடம் பணிந்து உன்னை வெல்லக்கூடியவர் எவரும் இவ்வுலகில் இல்லை. நீர் ஒரு சிறந்த வீரன். ஒரு அசரீரி உரைத்ததற்காக உன் தங்கையை கொல்ல துணிந்து விட்டாய், நீ மரணத்திற்கு பயப்படுவாய் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அதுமட்டுமின்றி இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். அப்படியிருக்க இவ்வளவு நாள் மிகுந்த பாசத்தோடு உன் தங்கையுடன் விளையாடி, ஆசையாக திருமணம் செய்துவைத்த நீயே அவளை கொல்வதா? வேண்டாம்... அவளுக்கு உயிர் அளித்து அவளை வாழவிடு என்று வேண்டினார்.

தொடரும்..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக