Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 21 அக்டோபர், 2019

ஏடிஎம் கார்டு நம்பர் போதும்; உங்க பணம் அபேஸ் - வேலூரில் சிக்கிக் கொண்ட முதியவர்!



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆலாம்பட்டரை கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயபாலன். இவர் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி, பின்னர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது செல்போனிற்கு சமீபத்தில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் இந்தியில் ஒரு நபர் பேசியுள்ளார். அப்போது, நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் வங்கிக் கணக்கின் ஏடிஎம் எண்ணைக் கூறுங்கள் என்று கேட்டுள்ளனர்.

அதனை நம்பி ஜெயகோபாலன் தனது ஏடிஎம் எண்ணை கூறியுள்ளார். அதன்பிறகு தான் அதிர்ச்சி காத்திருந்தது. உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22,250 பணம் எடுக்கப்பட்டு விட்டது என்று செல்போனிற்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயகோபாலன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். உடனே வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார். இதுபற்றி குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தொலைபேசி அழைப்புகள் மூலம் வங்கிக் கணக்கு தொடர்பான எந்தவொரு தகவலையும் தெரிவிக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவுறுத்தி வருகின்றன.

இருப்பினும் வயதானவர்கள் வெகுளித்தனமாக கயவர்களின் கைகளில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் பெரும் பண இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இனி வரும் காலங்களில் வங்கிகளின் அறிவுறுத்தலின்படி, செல்போன் மூலம் யாரிடமும் எந்தவொரு தகவலையும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!