Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 21 அக்டோபர், 2019

கவர்ச்சியான கண்களைப் பெற இதையெல்லாம் செய்யுங்க...

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கண்மை, மஸ்காரா, ஐ லைனர், ஐ ஷேடோ எல்லாமே கலந்து கட்டி அடித்தாலும் களையிழந்த கண்கள் ஐந்து சதவீதம் அழகை (உயிர்ப்பு ) கூட பெறாது. கண்களுக்கு அழகு தருவது மேக்கப் சாதனமல்ல.. கண் போன்ற பராமரிப்பு


கண்ணுக்கு மை அழகு என்பது உண்மையல்ல. சோர்வு இல்லாமல் இருப்பதே கண்ணுக்கு அழகு.
  • மஸ்காராவும் ஐ லைனரும் ஐ ஷேடோவும் களையிழந்த கண்களுக்கு கவர்ச்சியைத் தராது
  • கவர்ச்சியான கண்களைப் பெறுவதற்கு ஆழந்த தூக்கமும் முக்கியம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
களையிழந்த கண்கள் முகத்தின் அழகையும் களையிழக்கவே செய்யும். சருமத்தை அழகாக்க மேக்கப் சாதனங்கள் உதவும் ஆனால் களையிழந்த கண்களுக்கு என்ன மேக்கப் போட்டாலும் உரிய பராமரிப்பின்றி உயிர்ப்பை பெற முடி யாது...

கண்கள் பேசுமா.. உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் கவர்ச்சியான கண்களைப் பெறுவதற்கு உரிய பராமரிப்பு இருந்தால் போதும் என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்கள்... என்னவெல்லாம் செய்யலாம் பார்க்கலாமா...

அழும் கண்கள்
மனித உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு வாயிருந்தால் அழும் என்று சொல்வதாக இருந்தால் கண்ணுக்கு சொல்லலாம். இதயம் இயல்பாகவே ஓய்வின்றி செயல்படுகிறது. ஆனால் கண்ணுக்கு ஓய்வே அளிக்காமல் நாம் வேலை கொடுத்து கொண்டிருக்கிறோம்.

கம்ப்யூட்டர்,டீவி, செல்ஃபோன், கண்ணைக்கூசும் ஒளித்திரைகளுடன் மணிக்கணக்கில் செலவிடப்படும் நேரம், இருட் டில் கண்கூசும் வெளிச்சத்தில் விளையாட்டு என்று கண்களுக்கு ஒவ்வாத விஷயங்களை ஒழுங்காக செய்து கொண் டிருக்கிறோம். இதனால் கண்கள் அழகு ரீதியாக களையிழப்பதோடு ஆரோக்கிய ரீதியாகவும் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் கண் மருத்துவ நிபுணர்களும்.

இவை தவிர பணியிடங்களில் அதிக நேரம் கணினி முன்பு அமர்வதும், போதிய அளவு தண்ணீர் குடிக்காததும், சரிவிகித ஊட்டச்சத்து இல்லாததும் கூட மெல்லிய சருமம் கொண்டிருக்கும் கண்களைச் சுற்றியுள்ள பகுதியையும் கண்களையும் சோர்வுக்கு உள்ளாக்குகிறது. கருவளையம் உண்டாவதற்கான காரணங்களும் இவைதான்.

 
தினமும் 8 மணி நேர தூக்கம்
மனித உடலுக்கு நிச்சயம் 8 மணி நேரத் தூக்கம் அவசியம் என்கிறார்கள் உளவியலாளர்களும் மருத்துவர்களும். ஆரோக் கியமான உடலை அளிக்க மருத்துவர்களும், மன ரீதியான அழுத்தமின்றி உற்சாகமாக அடுத்த நாளை கழிக்க உதவும் என்று உளவியலாளர்களும் கூறுகிறார்கள்.

கண்களுக்கு ஓய்வு என்பது தான் கண்களைப் பராமரிப்பதற்கு முதல் வழி என்று சொல்லலாம்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பொருந்தும். தூங்கி வடிந்த கண்களில் எப்போதும் உயிர்ப்பு இருக்காது. அதனால் கண்கள் சோர்வுற்று ஓய்வு கேட்கும் போதெல்லாம் மறுக்காமல் ஓய்வு கொடுங்கள்.

இடைவெளியில் பராமரிப்பு
பணி நேரங்களில் குறிப்பாக கண்ணுக்கு வேலை கொடுக்க கூடிய பணிகளில் இருப்பவர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறையாவது இரண்டு நிமிடம் இடைவெளி எடுத்து உள்ளங்கையைத் தேய்த்து சூடேற்றி கண்கள் மீது வைத்து ஒற்றி எடுங்கள். இது பார்வைத்திறனையும் காக்கும். கண்ணுக்கு ஓய்வு கொடுத்தப்படி இருக்கும். இவை தவிர காலை நேரங்க ளிலும் கண்களுக்கான எளிய பயிற்சியையும் மேற்கொள்வது அவசியம்.

மேக்கப் இல்லாத இரவு
கண்களை அழகுப்படுத்ததான் எத்தனை சாதனங்கள்.. கண்ணுக்கு மை, இமைக்கு மஸ்காரா, கண்ணின் வெளித்தோற் றத்துக்கு ஐ லைனர், இன்னும் கொஞ்சம் அழகுப்படுத்த ஐ ஷேடோ இப்படி ஒட்டு மொத்த கலவையை கண்ணுக்கு கலந்து கட்டி அடித்தாலும் கண்ணில் உயிர்ப்பில்லை என்றால் கண்ணழகு என்னமோ ஐந்துசதவீதம் கூட இருக்காது என்பது தான் உண்மை.

கருவிழியான மீன்விழிக்கு கொஞ்சம் அழகு தேவைதான். ஆனால் நாளெல்லாம் இதனோடு கழிக்காமல் இரவு நேரங்க ளில் குளிந்த நீரில் கண்களைக் கழுவி கண்ணுக்கு மசாஜ் கொடுத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யுங்கள். முக்கி யமாக கண்கள் இரவு நேரங்களில் மேக்கப் இல்லாமல் ஒளிரட்டும்.

மசாஜ் தேவையா
கண்களுக்கு உயிரூட்டுவதே ஆரோக்கியமானது தான். குளிர்ந்த நீரில் கண்களைக் கழுவி விளக்கெண்ணெயை ஒரு டீஸ்பூன் உள்ளங்கையில் ஊற்றி கண்களைச் சுற்றி வட்ட வடிவில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.

கண்களின் சோர்வையும் மேக்கப் சாதனங்களில் இருக்கும் கெடுதலையும் நீக்குவதோடு கண்ணுக்கு புத்துணர்ச்சியை யும் கொடுக்கும். ஆழ்ந்த தூக்கத்தையும் கண்களுக்கு கம்பீரமும் கொடுக்கும். தினமும் ஐந்து நிமிடமாவது கண்களுக்கு உயிர்ப்பு கொடுக்க நேரம் ஒதுக்குங்கள்.

குறிப்பு
கண்களுக்கு மசாஜ் செய்யும் போது ஆலில் எண்ணெய், விளக்கெண்ணெய் என்று எதுவாக இருந்தாலும் கண்களை மூடிக் கொள்ளுங்கள். விளக்கெண்ணெய் பிசுபிசுப்பைக் கொண்டிருந்தாலும் அழகான கண்களை அளிக்கக்கூடும்.
 

பளிச் கண்களுக்கு என்னவெல்லாம் செய்யலாம்
தக்காளி
வாரம் ஒருமுறை கண்களுக்கு மட்டுமான ஃபேஷியலில் கவனம் செலுத்துங்கள். தக்காளி நன்றாக பழுத்த நாட்டுத் தக்காளியை விழுதாக்கி கண்களின் மேல் தடவி குளிர்ந்த நீரால் கழுவுங்கள். ஐஸ்கட்டியை மெல்லிய துணியில் சுற்றி ஒத்தடம் போல் கொடுப்பதும் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும். கண்ணில் சுருக்கங்களை அகற்றும்.


வெள்ளரிக்காய்
உஷ்ணமான கண்களுக்கு குளிர்ச்சிதரக்கூடியது வெள்ளரிக்காய். அதனால் தான் அழகு நிலையங்களில் முகத்துக்கான பராமரிப்பு எதுவாக இருந்தாலும் வெள்ளரிக்காயை வட்டவடிவில் கத்தரித்து கண்களின் மேல் வைக்கிறார்கள்.
வெள்ளரிக்காயை மசித்து கண்களின் மேல் தடவி அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தடவினால் கண்களில் பொலிவு கூடுவதை உணரலாம்.

சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழை மடலை இரண்டாக வெட்டி முட்களை அகற்றி கண்ணை மூடியபடி அதன் நுங்கு பகுதியைக் கண்க ளில் வைத்து வட்டவிடிவில் மசாஜ் செய்துவந்தால் கண்களில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி கண்ணுக்கு பளிச் தோற்றம், பொலிவு, அழகு, கூர்மை எல்லாம் பெறலாம்.

சோற்றுக் கற்றாழை கண்ணுக்கு அழகு தருவதோடு கருவளையம் தழும்பு போன்றவற்றையும் நீக்கும் அற்புதமான குணத்தைக் கொண்டது.

தண்ணீரில் கண்
வாயகன்ற பாத்திரத்தில் சுத்தமான நீரை நிரப்பி கண்களை திறந்தபடி அந்நீரில் வைத்து எடுக்க வேண்டும். வாரம் ஒரு முறை இப்படி செய்து வரும்போது கண்களில் இருக்கும் அழுக்குகள், கிருமிகள் வெளியேறும். கண்களுக்கு ஈர்ப்பு கொடுக்கும்.

உணவில் கவனம்
எப்போதும் நொறுக்குத்தீனிகளை நொறுக்காமல் கொழுப்பு குறைந்த நார்ச்சத்து மிக்க உணவுகள், பழங்கள் அல்லது பழச்சாறுகள், காய்கறிகள். போதுமான தண்ணீர் போன்றவை ஆரோக்கியமான உடலுடன் ஆரோக்கியமான கண்களை யும் அளிக்கும். பொலிவு மற்றும் கம்பீரத்தையும் கொடுக்கும்.

மீன் விழியாள்
பதின்ம வயதுக்கு பிறகு கண்களை அழகுப்படுத்த மேக்கப் சாதனங்களைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு வள ரும் பருவத்திலேயே கண்களைப் பராமரிப்பது அவசியம். அப்படி இருந்தால் பெண் குழந்தைகள் வளரும் பருவத்தில் அழகிய மீன் விழியாளை கவர்ச்சிகரமான கண்களைப் பெறுவார்கள்.

நமது முன்னோர்கள் கண்களுக்கு எண்ணெய் கட்டி குளிப்பார்கள். சுத்தமான நல்லெண்ணெயை கண்களில் ஊற்றி கண்ணுக்கு மசாஜ் செய்து குளிப்பார்கள். ஆனால் தற்போது மருத்துவர்கள் இதை ஊக்குவிப்பதில்லை.

ஆனால் முன்னோர்கள் இயற்கை முறையில் கண் மை தயாரிப்பதைப் போன்று நாமும் தயாரித்து பயன்படுத்தலாம். இந்தக் கண்மை ஆரோக்கியமாகவே கண்களில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும் என்பதால் அனைத்து வயதின ரும் இதை பயன்படுத்தலாம்.

இயற்கையாக கண் மை தயாரிக்கும் முறையை அறிந்து கொள்வோமா?
சுத்தமான மஸ்லின் துணியை எடுத்து சுத்தமான சந்தன குழைச்சலில் ஊறவிடுங்கள். நன்றாக ஊறியதும் அதை எடுத்து நிழலில் உலர்த்தி காயவிடுங்கள்.

நன்றாக காய்ந்ததும் அதைத் திரியாக்கி கொள்ளவும். அகலமான செம்பு தட்டை எடுத்து சுத்தம் செய்து அதனுள்ளே சந்த னத்தைக் குழைத்து (சந்தன வில்லை அல்ல) தடவுங்கள்.அகல் விளக்கில் விளக்கெண்ணெய் விட்டு திரி வையுங்கள்.

சந்தனம் தடவிய செம்பு தட்டு தீபத்தின் மீது படும்படி வையுங்கள். திரியின் தீபமானது எரிந்து சந்தனம் தடவிய செம்புத் தட்டின் மீது படிந்து சந்தனக் கரியை உண்டாக்கியிருக்கும். மறுநாள் காலை அந்தத் தட்டை எடுத்து அதில் படிந்திருக்கும் கரியை ஒரு ஸ்பூனால் எடுத்து கிண்ணத்தில் வையுங்கள்.


இதற்கு தகுந்த அளவில் விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்தால் இயற்கை கண் மை தயார். வருடம் முழுவதும் கெடா மல் இருக்கும் இந்தக் கண்மை கண்ணுக்கும் குளிர்ச்சித்தரக்கூடியது.

இயற்கை கண் மையுடன் இணைந்து மற்ற தரமான அழகு சாதனங்களையும் உபயோகப்படுத்துங்கள். முகத்தை மறைக்காமல் காட்டும் கண்ணாடி போல் உள்ளத்தை மறைக்காமல் காட்டும் கண்ணுக்கு உயிர்ப்பு கொடுக்க கண்ணை கண் போல் பாதுகாக்க வேண்டும்.

அப்படியான பராமரிப்பு இருந்தால் கண்கள் உயிர்ப்போடு கம்பீரமாக கவர்ச்சியாக இருக்கும். அழகை கூட்டி காண்பிக் கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!