Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 23 அக்டோபர், 2019

மழையினால் மின் தடையா.? கவலை வேண்டாம்... இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்...

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் நிலையில் மின் தடை தொடர்பாக புகார் கூற தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையொட்டி சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க கோரி, தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

பொதுவாக மழைக்காலத்தில் இடி, மின்னல் தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்படுவது இயல்பு. இரவு நேரங்களில் வீட்டில் தடையாகும் மின்சாரத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். குறிப்பாக கிராம பகுதிகளில் இருப்பவர்களுக்கு பாம்பு, விஷ பூச்சிகளின் அச்சுறுத்தல் அதிகம்.

மின்சாரம் தடை செய்யப்பட்ட உடன், பொதுமக்கள் நேரடியாக கட்டுப்பட்டு அறைக்கு தொடர்பு கொள்ள மின்சார வாரியம் அதற்கான தொலைபேசி எங்களை வெயிட்டுள்ளது. 1912 மற்றும் 24959525 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும்.

பருவமழை தொடர்பான மின்சார தயார் நிலைகளை குறித்து அதிகாரிகளிடம் மின் துறை அமைச்சர் தங்கமணி ஆலோசனை செய்தார். அப்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மக்கள் மத்தியில் இந்த அவசர கால சேவை பயனுள்ளதாகவே இருக்கும்.
 
பொதுவாக மழைக்காலத்தில் மக்கள் படும் அவதிகளில் மின்சார தடையும் ஒன்று. வீடுகளில் மின்சாரம் தடை ஏற்படும் போது அருகிலிருக்கும் ஈபி அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தால் சில நேரங்களில் உடனடியாக பழுது பார்க்கப்படுவதும், சில நேரங்களில் கவனக்குறைவாக இருப்பதும் என மக்கள் புகார் கூறுகின்றனர்.

இந்த நிலைமை பருவமழை காலத்தில் ஏற்பட கூடாதென மின்சார வாரியம் பொதுவான புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டால், கட்டுப்பாடு அறையிலிருந்து சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு லைன் மேன்கள் அனுப்பிவைக்க வலியுறுத்தப்படுவார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!