Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 14 அக்டோபர், 2019

சமூக வலைத்தள கணக்குகளை ஆதார் உடன் இணைக்க வேண்டுமா? என்ன சொல்கிறது உச்ச நீதிமன்றம்!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஆதார் இணைப்பு தொடர்பான பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை இன்று வழங்கியுள்ளது. இதனால் சமூக வலைத்தள கணக்குகள் உடன் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை.


ஹைலைட்ஸ்
  • ஆதார் இணைப்பு என்பது கட்டாயமா?
  • என்ன சொல்கிறது உச்ச நீதிமன்றம்?
நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே அடையாள அட்டை என்று அம்சத்துடன் ஆதார் அட்டையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனுடன் வருமான வரி கணக்கிற்கான பான் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சிம் கார்டு, வங்கி கணக்கு தொடங்குதல், அரசின் சேவைகள் பெறுதல் போன்றவற்றிற்கு ஆதார் கட்டாயம் என்று கூறப்பட்டது. இருப்பினும் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த சூழலில் சமூக வலைத்தளக் கணக்குகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அஸ்வினி என்பவர் பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இதன் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அனைத்து வழக்குகளையும் நாங்கள் விசாரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வேண்டுமெனில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதிகள் கூறினர்.

 
இதனை ஏற்றுக் கொண்டு மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றார். இதையடுத்து சமூக வலைத்தளக் கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!