Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 11 நவம்பர், 2019

கேஷ் ஆன் டெலிவரி: ஆர்டர் கைக்கு வருகிறதா?





இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஆன்லைன் தளங்களில் கேஷ் ஆன் டெலிவரி முறையில் முன்பதிவு செய்யும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு டெலிவரி செய்யப்படுவதில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஹைலைட்ஸ்
  • ஆன்லைன் ஆர்டர்களில் கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்களின் பங்கு 65 சதவீதமாக இருக்கிறது.
  • பார்சல் ரிட்டன் செய்யப்படும்போது அதற்கு ரூ.150 வரையில் இழப்பு ஏற்படுகிறது.
இந்தியாவில் தொழில்நுட்ப அம்சங்கள் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் நிலையில், மக்கள் தங்கள் வாழ்க்கை ஓட்டத்துக்கு ஏற்ப, தங்களது தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்துவருகின்றனர். ஸ்மார்ட்போன்களைக் கொண்டு அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே கடைகளுக்குச் செல்லாமல் பொருட்களை ஆர்டர் செய்துபெறுகின்றனர். ஆர்டர் செய்யும் பொருட்கள் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன.

இந்திய இ-காமெர்ஸ் சந்தையில், ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பல ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பல்வேறு சிறப்புச் சலுகைகளை அளித்து வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்க்கும் முனைப்பில் இந்நிறுவனங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
 
ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும்போது கேஷ் ஆன் டெலிவரி சென்ற சலுகை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம், நமக்குத் தேவையான பொருட்களை பணத்தைச் செலுத்தாமலேயே முன்பதிவு செய்து, பொருளைக் கையில் வாங்கும்போது அதற்கான பணத்தைச் செலுத்தலாம் என்பதால் கேஷ் ஆன் டெலிவரி முறையில் மக்கள் அதிகமாக பொருட்களை வாங்குகின்றனர்.

 ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் பொருட்களில் கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்களின் பங்கு 65 சதவீதமாக இருக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால் கேஷ் ஆன் டெலிவரி முறையில் பொருட்களை ஆர்டர் செய்துவிட்டு அவற்றை ரிட்டர்ன் செய்யும் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது.

பெரிய அளவிலான பார்சல் ஒன்று ரிட்டன் செய்யப்படும்போது அதற்கு ரூ.150 வரையில் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக ’லெட்ஸ் டிரான்ஸ்போர்ட்’ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான புஷ்கர் சிங் கூறுகிறார். கேஷ் ஆன் டெலிவரி முறையைத் தவிர்த்துவிட்டு மற்ற வழிகளில் பொருட்களை முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள வழங்கினால் இழப்புகளைத் தவிர்க்கலாம் என்கிறார் அவர்.
 
கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்யும் பொருட்கள் பல்வேறு காரணங்களுக்காக டெலிவரி செய்யமுடியாமல் போகின்றன. மொத்த ஆர்டர்களில் மூன்றில் ஒரு பங்கு டெலிவரி செய்யப்படாமல் போவதாக சர்வதேச ஆய்வு நிறுவனமான நார்வர் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!