>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 9 ஜனவரி, 2020

    யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் -முதலமைச்சர் பழனிச்சாமி.!

    யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் -முதலமைச்சர் பழனிச்சாமி.!
    திருவள்ளூரை அடுத்த உள்ள கொண்டஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன். இவரது மனைவி பத்மாவதி  இவர்களின் கடைசி மகன் யாகேஷ்.இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஒரு தனியாா் நிறுவனத்தில்  டிரைவராக வேலை செய்து வருகிறார்.
    இந்நிலையில் கடந்த 26-ம் தேதி கொண்டஞ்சேரி கிராமத்தின் சாலையில் இரவு யாகேஷ் தனது நண்பா்கள் பிராங்க்ளின், பிரேம்குமாா், வினீத்குமாா் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது மப்பேடு சந்திப்பு சாலையில் நரசிங்கபுரம் செல்வதற்காக இளம் பெண் ஒருவா் ஆட்டோவில் ஏறினாா். ஆனால் அந்த ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி வழியாக கடம்பத்தூா் சென்றது.
    இதனால் அந்த பெண் ஆட்டோவில் இருந்து கத்தி உள்ளார். அதைக் கேட்டுத் யாகேஷ் தனது நண்பர்களுடன் ஆட்டோவைத் துரத்தி உள்ளார். அப்போது எதிரே வாகனம் வர ஆட்டோ மெதுவாகச் சென்றபோது ஆட்டோவில் இருந்து அந்தப் பெண் குதித்து விட்டாா்.
    பின்னர் அந்த பெண்ணை தனியாா் மருத்துவமனைக்கு தான் நண்பர்களை அழைத்து செல்ல கூறிவிட்டு யாகேஷ் மற்றும் பிராங்க்ளின் இருவரும்  இருசக்கர வாகனத்தில் அந்த ஆட்டோவைப்  துரத்தி சென்றனர். ஆட்டோவைக் கடந்து சென்று ஆட்டோவின் முன்னால் வாகனத்தை  நிறுத்த முயற்சி செய்தபோது ஆட்டோ டிரைவர் யாகேஷின் மீது ஆட்டோ கொண்டு  மோதினார்.
    இதனால் யாகேஷ் படுகாயமடைந்தாா். ஆபத்தான நிலையில் யாகேஷ் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையெடுத்து கடந்த 28-ம் தேதி யாகேஷ் உயிரிழந்தாா்.
    இந்நிலையில் இன்று சட்டசபையில்  முதலமைச்சர் பழனிச்சாமி  உயிர் இழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி எனஅறிவித்து உள்ளார்.மேலும்  காயமடைந்த பிராங்க்ளினுக்கு ரூ .2 லட்சமும் , மற்ற 3 இளைஞர்களுக்கு ரூ .25,000 நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக