Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 21 ஜனவரி, 2020

நாடு விட்டு நாடு தாவும் புதிய வைரஸ்.! மேலும் ஒருவர் பலி.!

மக்களே உஷார்..!  நாடு விட்டு நாடு தாவும் புதிய வைரஸ்.! மேலும் ஒருவர் பலி.!


சீனாவில் தற்போது புதியதாக பரவி வரும் நோய் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல். இந்த காய்ச்சல் முதலில் சீனாவின் மத்திய நகரான வூஹானில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரில் மொத்தமாக ஒரு கோடியே 10 லட்சம்பேர் வசித்து வருகின்றனர்.
இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான சுவாசப்பிரச்சினை காரணமாக உயிரிழக்கின்றனர். வூஹான் நகரில்மட்டும் 170 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அவர்களில் 9 பேர்  நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.சீனா மொத்தமாக 201 பேருக்கு கொரனா வைரஸ் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
வூஹான் நகரில் மட்டும் 1,700 பேர் கொரனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் உலக தொற்றுநோய் ஆய்வு மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.வூஹான் நகரில் உறவினர்களை பார்த்து விட்டு வீடு திரும்பிய தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளை சார்ந்த 3 பேருக்கு இந்த கொரனா வைரஸ் காய்ச்சல் தாக்கியது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் சீனா முழுவதும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ் ஒரு விலங்கு மூலம் மனிதனுக்கு பரவியதாகவும் பின்னர் மனிதனிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாகவும் கூறப்பட்டுகிறது.
மேலும்  இந்த வைரஸ் இந்தியாவில் பரவிவிடுமோ என்ற எண்ணத்தில் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளிடம் இந்த கொரனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்டுகிறார்கள்.இந்நிலையில் இதுவரை 3 பேர் உயிரிழந்தது நிலையில் மேலும்  ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!