Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஜனவரி, 2020

வயிறு வலியால் மருத்துவமனைக்கு சென்ற ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்

லங்கையில் ஆண் ஒருவர் வயிறு வலி என மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இலங்கையில் உள்ள மாத்தறை என்ற பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர்க்கு திடீரென வயற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் சோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதும். அவர் வயிற்றிற்குள் குழந்தை பிறக்கும் நிலையிலும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அவரை பரசவம் பார்க்கும் அறைக்கு எடுத்து செல்லும் படி மருத்துவமனை ஊழியர்களிடம் கூறினார்.

அங்கு பிரசவம் பார்ப்பதற்காக காத்துக்கொண்டிருந்த நர்ஸ்கள், தாடி மீசையுடன் ஒரு ஆண் பிரசவத்திற்கு வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வந்த மருத்துவர் அவரை பரிசோதித்த போது அவர் பெண்ணாக இருந்து பின்னர் ஆணாக தன்னை மாற்றிக்கொண்டவர் என்பதை உணர்ந்தார்.

 அவர் மனதளவில் ஆணாக இருந்தாலும் உடல் அளவில் ஒரு பெண் தான். அதனால் அறிவியல் ரீதியாக அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அறிந்து அவர் ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.

அவரது அடையாள அட்டைகளை பார்க்கும் போது அவர் ஆண் என்றே குறிப்பிட்டப்பட்டிருந்தது. தற்போது அவர் தனக்கு இந்த குழந்தை வேண்டாம். யாரேனும் தத்து கேட்டால் கொடுத்துவிடுங்கள் என மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

பெண் ஒருவர் ஆணாக மாறி தற்போது பெண் போல குழந்தை பெற்றுக்கொண்ட விவகாரம் பெரும் வைரலாக பரவி வருகிறது. ஆண் பெற்றெடுத்த இந்த குழந்தையை யார் தத்தெடுக்கப்போகிறார் என பலர் எதிர்பார்த்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக