Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 10 பிப்ரவரி, 2020

தண்ணீர் கொட்ட வேண்டிய டேங்கர் லாரியில் கள்ளச் சாராயம்!!



 பீகாரில் தண்ணீர் சப்ளைக்காக பயன்படுத்தப்படும் டேங்கர் லாரியை கள்ளச் சாராயம் விற்க பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுவை அளிக்க அரசு நினைத்தாலும், கள்ளக் கடத்தல் பேர்வழிகள் அதற்கு அனுமதிக்கமாட்டார்கள் என்பது இந்த மாநிலத்தில் உறுதியாகியுள்ளது.
 
பீகாரில் கடந்த 2017ஆம் ஆண்டில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டது. மது தடை செய்யப்பட்டதால் எந்த வகையிலும் வருமானம் பாதிக்கப்படவில்லை என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்து இருந்தார். இதனால் அந்த மாநில மக்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று மது அருந்தி வருவதாகவும் செய்தி வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் அந்த மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் இருக்கும் சாகியா கிராமத்தில் டேங்கர் லாரியில் கள்ளச் சாராயம் கடத்தி வந்து விற்றது கண்டறியப்பட்டுள்ளது. இந்த லாரியில் 330 அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்கள் மற்றும் ஹரியானாவில் தயாரிக்கப்பட்ட 400 உள்நாட்டு கள்ளச் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த டேங்கர் லாரியில் ''சுவச் பாரத் அபியான்'' ''பேடி பதாவ், பேடி பச்சாவ்'' என்று வேறு எழுத்தப்பட்டு இருப்பதுதான் அவமானத்துக்குரியது. மதுவுக்கு ஏங்கிக் கிடக்கும் மது அடிமைகளுக்கு இதுபோன்ற லாரிகளை திருட்டுத்தனமாக பயன்படுத்தப்படுவது அரசுக்கும், அந்தப் பகுதி மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மஹி காவல் நிலைய அதிகாரி நீரஜ் குமார் மிஸ்ரா கூறுகையில், ''மது பாட்டில்களை வைப்பதற்கு என்று டேங்கர் லாரியில் சிறப்பு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த லாரியை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க அத்துடன் ஒரு காரும் சென்றது. காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் லாரியின் ஓட்டுனரும், கைது செய்யப்பட்டுள்ளார். ஓட்டுனரிடம் லாரியில் என்ன இருக்கிறது என்று கேட்டதற்கு தண்ணீர் இருக்கிறது என்று கூறினார். இதையடுத்து லாரியில் இருக்கும் குழாயை திறந்து பார்த்தோம். தண்ணீர் வரவில்லை. சோதித்தபோது, லாரியில் மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது'' என்றார்.

தொடர்ந்து பீகாரின் பல இடங்களில் இதுபோன்று டேங்கர் லாரிகளில் திருட்டுத்தனமாக கள்ளச் சாராயம் விற்கப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. பீகார், உத்தரப்பிரதேச மாநில எல்லைகளில் இதுபோன்று மது விற்கப்படுவதை தவிர்க்கவும், கண்காணிக்கவும் காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யுமாறு, காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் டேங்கர் லாரியும் உத்தரப்பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கள்ளச் சாராயம் கடத்துவதற்கு சவப்பெட்டிகள், சைக்கிள், காய்கறிகள் பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில சமயங்களில் தர்ப்பூசணிக்குள் வைத்தும் கள்ளச் சாராயம் கடத்தியுள்ளனர்.

இரவு நேரங்களில் வந்தால் சோதனை அதிகமாக இருக்கும் என்று பகல் நேரங்களில் கள்ளச் சாராயம் கொண்டு வந்துள்ளனர். அவ்வப்போது கள்ளச் சாராயம் கொண்டு வருவதற்கான யுக்தியையும் மாற்றியுள்ளனர்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!