>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 30 மார்ச், 2020

    இனி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வீட்டு வாசலில் கிடைக்கும்!


    அத்தியாவசியப் பொருள்களைத் தடையின்றி பொதுமக்களுக்கு வழங்குவதை உறுதிசெய்ய முதல்வர் அமரீந்தர் சிங் மாநிலத் துறைகளுக்கு உத்தரவு!!

    ஊரடங்கு உத்தரவுகளுக்கு மத்தியில் மக்களுக்கு எந்தவிதமான கஷ்டங்களும் ஏற்படாதவாறு அவர்களின் வீட்டு வாசலிலேயே தடையின்றி அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

    பல மாவட்டங்களில் இருந்து அறிக்கைகள் வெளிவந்ததை அடுத்து இந்த திட்டம் வகுக்கபட்டுள்ளது. அதில், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்று பலர் புகார் கூறினர். இந்த உத்தரவுகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அனைத்து நிர்வாக செயலாளர்கள், துறைத் தலைவர்கள், பிரதேச ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டார்.

    அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் போதுமான மற்றும் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்காக, சில்லறை விற்பனை, மொத்த விற்பனை உள்ளிட்ட நிறுவனங்கள் வீட்டு விநியோகத்திற்கு மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

    பழங்கள், காய்கறிகள், முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுவது மக்களுக்கு தடையின்றி கிடைக்க உறுதி செய்யப்படும். அறிக்கையின் படி, சில்லறை விற்பனை, மொத்த விற்பனை, கிடங்கு, உற்பத்தி போன்ற மருந்துகளும் திறந்த நிலையில் இருக்கும். இது தவிர, கோழி தீவனம், கால்நடை மருந்துகள், கால்நடை மருத்துவமனைகள் போன்றவை செயல்படும்.

    இவை தவிர, வங்கிகள், ATM-கள், ரொக்க வாகனங்கள், ரொக்க விநியோகம், தொழிலாளர்களுக்கு முதலாளிகளால் ஊதியம் வழங்குவது ஆகியவை இடையூறாக இருக்காது. மேலும், பேக்கேஜிங், பேக்கிங் பொருள், பிளாஸ்டிக் பைகள் போன்றவையும் வழங்கப்படும்.

    பெட்ரோலிய பொருட்களின் வழங்கல் கிடைக்கப்பெறும் மற்றும் பெட்ரோல் பம்புகளும் திறந்திருக்கும். 

    கொரோனாவை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு காலத்தில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் விவசாயிகள் எந்தவொரு கஷ்டத்திற்கும் சிரமத்திற்கும் ஆளாகாமல் இருக்க மாநிலத்தில் உள்ள அனைத்து பால் ஆலைகளும் செயல்பட வைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர் ஒத்துழைப்புத் துறைக்கு அறிவுறுத்தினார்.

    மாநிலத்தின் கோவிட் -19 மேலாண்மை முயற்சிகளின் பல்வேறு முக்கிய அம்சங்களைக் கையாள பஞ்சாப் அரசு நான்கு குழுக்களை அமைத்துள்ளது. இதற்கிடையில், ஊரடங்கு உத்தரவு காலத்தில் விவசாயிகள் தொடர்பான குறைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்க விவசாயத் துறை ஒரு மாநில கட்டுப்பாட்டு அறையை நிறுவியது. 

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக