Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 மே, 2020

கொரோனா தடுப்பு நிதியாக பிரபல கதாசிரியர் கொடுத்த மிகப்பெரிய தொகை

இந்தியா உள்பட உலகம் முழுவதும் தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள், திரையுலகினர் ஆகியோர் கோடிக்கணக்கில் கொரோனா தடுப்பு நிதியாகவும், ஏழை எளியவர்களின் பசியை போக்க டன் கணக்கில் உணவு பொருட்களையும் கொடுத்து உதவி செய்து வருகின்றனர். 

உலகளவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் கொரோனாவால் தவித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு 1.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்துள்ளார். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் அதில் இருந்து குணமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!