Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 12 ஜூன், 2020

2-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகத்தை அருளக்கூடியவர் என்று போற்றப்படுகிறார்.

ஒருவருக்கு பொன், பொருள், மனைவி, சுகமான வாழ்க்கை, உயர்பதவி, கலை, வாகன யோகத்தை தருபவர் சுக்கிரன்.

சுக்கிரபகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவர் சுக்கிராச்சாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அமிர்த சஞ்சீவி என்ற மந்திரத்தை கற்றார். இந்த மந்திரத்திற்கு ஒரு முக்கிய ஆற்றல் இருக்கிறது.

அது என்னவென்றால், இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் தரும் ஆற்றல் வாய்ந்த மந்திரம் அது.

சுக்கிரபகவானின் நல்ல குணத்தை கண்டுதான் சிவபெருமான் இந்த மந்திரத்தை சொல்லிக்கொடுத்தார். இவருடைய வாகனம் கருடன். பார்ப்பதற்கு வெள்ளை உருவமாக இருப்பதால் இவர் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறார்.

லக்னத்திற்கு 2-ல் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

2ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

👉 போஜன சுகம் உடையவர்கள்.

👉 இனிமையாக பேசக்கூடியவர்கள்.

👉 நண்பர்கள் அதிகம் கொண்டவர்கள்.

👉 அழகான பெரிய விழிகளை உடையவர்கள்.

👉 இனிமையான குடும்பம் அமையப்பெற்றவர்கள்.

👉 சுபிட்சமான வாழ்க்கை உடையவர்கள்.

👉 பெண்களின் மூலம் தனலாபம் அடையக்கூடியவர்கள்.

👉 புத்திசாலியான செயல்பாடுகளை உடையவர்கள்.

👉 பிறருக்கு கற்பித்தல் பணி மற்றும் ஆலோசனை வழங்கக்கூடிய அமைப்பை பெற்றவர்கள்.

👉 மற்றவர்களை கவரும் பேச்சுக்களை உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!