>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 26 ஆகஸ்ட், 2020

    மகனை தனியாக தவிக்க விட்ட தந்தை... நோக்கம் என்ன?.. - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -------------------------------------
    சிரிக்கலாம் வாங்க...!!
    -------------------------------------

    மேனேஜர் : கல்யாணத்துக்கு விவசாய கடன் கேட்டா எப்படி சார்?
    ராமு : கல்யாணமும் ஆயிரம் காலத்து பயிர்தானே சார்..
    மேனேஜர் : 😡😡
    -------------------------------------
    எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும்...!!!
    -------------------------------------

    🌟 சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்கு சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். 'மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய்.

    🌟 இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது, வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது" என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

    🌟 அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பி செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது.

    🌟 அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு தூரத்தில் ஆந்தை கத்துவதும், நரி ஊளையிடுவதும் பயத்தை ஏற்படுத்தியது.

    🌟 காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. மரங்கள் பேயாட்டம் ஆடின. மழை பெய்ய துவங்கியது.

    🌟 கடுங்குளிர் ஊசியாய் உடலை துளைத்தது. இப்படி நிர்க்கதியாய் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே... யாராவது வந்து என்னை காப்பாற்றுங்களேன் என்று பலமுறை கத்தி பார்த்தான்.

    🌟 சிறிது நேரத்தில், இனி கத்தி பயனில்லை என்பது அவனுக்கு புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே... என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்க தொடங்கினான்.

    🌟 இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாக கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பை சுட்டபோதுதான், கண்கட்டை திறந்து பார்த்தான்.

    🌟 கண்ணை கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. 'அப்பா" என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையை தழுவி கொண்டான்.

    🌟 'அப்பா நீங்க எப்போ வந்தீங்க?" என்று ஆவலாக கேட்டான். சோர்வும், மகிழ்ச்சியும் கொண்டிருந்த தந்தை, 'நான் எப்போது மகனே உன்னை விட்டு போனேன்" என்றார்.

    🌟 இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறிய போதெல்லாம் என்னை காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?" என்று கேட்டான்.

    🌟 'உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மௌனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானாக வரும்" என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக