>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 10 ஆகஸ்ட், 2020

    இந்தியாவில் தொழில் செய்வது கஷ்டம்: ஃபோக்ஸ்வேகன்!

    சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய விதிக்கப்படும் தடையால் இந்தியாவுக்குத்தான் பாதிப்பு என்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஜெர்மனியைச் சேர்ந்த மிகப் பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் குரூப், இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கார்களைத் தயாரித்து செய்து விற்பனை செய்து வருகிறது.  

    மகாராஷ்டிர மாநிலம் புனேவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் ஆண்டுக்கு 1 லட்சம் கார்களுக்கு மேல் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இதற்காக இந்தியாவில் கோடிக் கணக்கில் தொடர்ந்து முதலீடும் செய்து வருகிறது. தற்போது ரூ.8,000 கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள அந்நிறுவனம் இந்தியாவில் தொழில் புரிவது மிகவும் கடினமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

    இந்தியா - சீனா பிரச்சினையைத் தொடர்ந்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பல்வேறு பொருட்கள் மீது இந்தியா தடை விதித்தது. ஆட்டோமொபைல் உற்பத்திக்குத் தேவையான பெரும்பாலான உதிரிப்பாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அவற்றின் மீது விதிக்கப்படும் தடை இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த நடவடிக்கைகளால் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியும் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநரான குருபிரதாப் போபாராய் கூறுகையில், “இறக்குமதித் தடை போன்ற நடவடிக்கைகள் எங்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன. நாம் மிகச் சிறந்த ஏற்றுமதியாளராக வேண்டும் என்று நினைத்தால் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதியும் தேவைப்படுகிறது. அவ்வாறு கிடைத்தால்தான் ஏற்றுமதியில் போட்டித்தன்மை இருக்கும். ஆட்டோமொபைல் துறைக்கு பிரத்தியேகமான கொள்கைகள் நீண்ட கால அடிப்படையில் இருக்க வேண்டும். அவை அடிக்கடி மாற்றப்படும் வகையில் இருக்கக் கூடாது” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு புனே, அவுரங்காபாத் ஆகிய இடங்களில் இரண்டு உற்பத்தி ஆலைகள் உள்ளன. இங்கு ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி உள்ளிட்ட பிராண்டு கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாமல் போர்ச்சே, லம்போர்கினி போன்ற நிறுவனங்களிடமிருந்தும் கார்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக