Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 12 அக்டோபர், 2020

2 சிறுமிகளை 6 மாதங்களாக வன்கொடுமை செய்து கொடூரம்! – நாமக்கலில் பரபரப்பு!

 

நாமக்கல் அருகே இரண்டு சிறுமிகளை கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில நாட்களாக நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நாமக்கல் அருகே சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரத்தை சேர்ந்த 12 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகளை 75 வயது முதியவர் உட்பட 6 பேர் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. அதை தொடர்ந்து முதியவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!