தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாள்களாக பரபரப்பாக விவாதிக்கப்பட்டு
வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று காலை விலகிய குஷ்பு மதியம்
பாஜகவில் இணைந்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை குறித்து காங்கிரஸ் ஒரு நிலைப்பாடு எடுத்திருந்தபோது பாஜகவுக்கு
ஆதரவான கருத்தை தெரிவித்து சர்ச்சையை பற்ற வைத்தார்.
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி ஒரு பாதையில் பயணிக்க குஷ்பூ மட்டும்
வண்டியை வேறு பக்கம் திருப்புகிறாரே என கேள்வி எழுந்தது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில்தான்
இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதன்பின் காங்கிரஸ் மேடையிலேயே பாஜகவை
விமர்சித்துப் பேசினார். இதனால் பாஜகவில் அவர் இணைய வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டது.
ஆனால் நேற்று முதல் மீண்டும் இது குறித்த விவாதம் பெரியளவில் எழுந்தது. பாஜகவில் இணையவுள்ளீர்களா,
காங்கிரஸ் கட்சியில் தொடர்கிறீர்களா என எந்தக் கேள்வி கேட்டாலும் நோ கமெண்ட்ஸ் என நழுவியவர்
இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
காலையில் காங்கிரஸ் தலைமை அவர் வகித்து வந்த அகில இந்திய செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து
அவரை நீக்கியது. அதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து குஷ்பு விலகுவதாக சோனியா காந்திக்கு
கடிதம் எழுதினார்.
காலையில் காரசாரமாக இதுபற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே மதியம் டெல்லியில் பாஜக அலுவலகத்திற்கு
சென்று தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
“பாஜகவில் இணைவது முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு. எதிர்க்கட்சியில் இருக்கும் போது
ஆளுங்கட்சியை விமர்சிப்பது இயல்பு. கட்சியில் இருக்கும் வரை அவர்களுக்கு சாதகமாக பேசுவது
கடமை. பாஜகவில் அடிப்படை தொண்டராக பணியாற்றுவேன்” என குஷ்பு பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக