Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 29 அக்டோபர், 2020

அடிக்கடி உணவில் ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

 தினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் || sago health benefits

ஜவ்வரிசி இல்லாமல் இந்தியாவில் எந்த விரதமும் நிறைவடைவதில்லை. தற்சமயம் நவராத்திரி விரதம் கூட ஏற்கனவே துவங்கிவிட்டது. அப்படி இருக்கையில் ஜவ்வரிசியை எப்படி மறக்க முடியும். ஜவ்வரிசியில் செய்யும் பாயாசம் முதல் கிச்சடி வரை அனைத்தும் சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் உள்ளது

ஜவ்வரிசி பற்றிய அனைத்து ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் நொய்டாவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் நமீதா நாடார் கூறுகிறார். “ஜவ்வரிசியில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக ஃபைபர் அதிகம் உள்ள உணவாக ஜவ்வரிசி உள்ளது. எனவே காய்கறிகள் அல்லது நார்ச்சத்து நிறைந்த உணவுகளோடு ஜவ்வரிசியை கலப்பது மூலம் சத்தான உணவை பெற முடியும். மேலும் இதை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.” என அவர் கூறுகிறார்.

இதுதவிர அவர் ஜவ்வரிசி மூலம் கிடைக்கும் ஐந்து நன்மைகளையும் கூறினார். இந்த நன்மைகள் காரணமாக விரத நாட்கள் முடிந்த பின்னரும் இவற்றை நாம் நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அப்படியென்ன ஐந்து நன்மைகள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.

​இரத்த அழுத்தத்தை சரிசெய்கிறது.

 

தற்சமயம் உயர் ரத்த அழுத்தம் என்பது இந்தியாவில் அதிகமாகி வருகிறது. இதற்கு ஜவ்வரிசி சரியான தீர்வாக இருக்கும். ஜவ்வரிசியில் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த ஓட்டம் ஆரோக்கியமாக நிகழ உதவி செய்கிறது. மேலும் இரத்த ஓட்டத்தை கட்டுக்குள் வைக்கிறது. உடலில் ஆரோக்கியமான இரத்த ஓட்டம் இருப்பதால் இதயத்தில் உள்ள மன அழுத்தம் குறைகிறது, என்கிறார் மருத்துவர் நாடார்.

கர்ப்பிணி பெண்களின் கரு வளர்ச்சிக்கு

 

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால் உங்கள் உணவு முறையில் ஜவ்வரிசியை சேர்ப்பது ஆரோக்கியமான விஷயமாகும். இது உங்கள் வயிற்றில் உள்ள குழந்தைக்கு நன்மை பயக்கும். ஜவ்வரிசியில் வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது. அவை கரு வளர்ச்சிக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மேலும் ஜவ்வரிசியானது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.

​ஆற்றலை வளங்குகிறது

 

ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இவை உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. இதனால்தான் உண்ணாவிரதம் இருக்கும் காலங்களில் ஜவ்வரிசி பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் ஆரோக்கியமான முறையில் உங்கள் எடையை அதிகரிக்க விரும்புபவராக இருந்தால் உங்கள் உணவில் ஜவ்வரிசியை சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு பலன் கிடைக்கும். ஏனெனில் அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவாக இது உள்ளது.

​மலச்சிக்கலை சரி செய்கிறது

 

ஜவ்வரிசியானது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் மற்றும் வாயு வெளியாதல் போன்ற செரிமானம் தொடர்பான எந்த பிரச்சனையையும் இது சரி செய்கிறது. ஏனெனில் ஜவ்வரிசி செரிமான அமைப்பில் செயல்ப்பட்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எதிர்ப்பு ஸ்டார்ச்களை கொண்டுள்ளது.

​எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

 

ஜவ்வரிசியில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. அவை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவிப்புரிகின்றன. இதனால் எலும்பு வலுவடைகிறது. எலும்பின் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் இது எலும்பு தொடர்பான பிரச்சனைகள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை வராமல் தடுக்கிறது.

ஆனாலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு அல்ல, ஏனெனில் இதில அதிகமாக சர்க்கரை உள்ளது. ஜவ்வரிசி அதிகமான கார்போஹைட்ரேட்களை கொண்டிருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் ஜவ்வரிசியை தவிர்ப்பது நல்லது.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக