ஜனவரி 1 முதல், UPI மூலம் செய்யபடும் பணப்பரிமாற்றத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்; இதனால், யார் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
UPI கட்டண செயலிகளை நீங்கள் பயன்படுத்தினால் இந்த செய்தி உங்களுக்கானது. ஜனவரி 1 முதல், நீங்கள் அமேசான், கூகிள் பே (Google Pay) மற்றும் பேஃபோனைப் பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். உண்மையில், மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர்களால் நடத்தப்படும் UPI கட்டண சேவைக்கு ஜனவரி 1 முதல் கூடுதல் கட்டணங்களை விதிக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் முடிவு செய்துள்ளது.
சமீபத்திய தகவலின்படி, 2021 ஜனவரி 1 முதல் இந்தியாவில் மூன்றாம் தரப்பு UPI கட்டண பயனர்களின் பயன்பாட்டிற்கு 30% Cap விதிக்க NPCI முடிவு செய்துள்ளது, அதன் பயனர்கள் அதைப் பயன்படுத்துவது விலை உயர்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
யார் பாதிக்கப்படுவார்கள் - NPCI இன் இந்த முடிவு Paytm-யை பாதிக்காது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், இது கூகிள் பே, அமேசான் பே மற்றும் ஃபோன் பே போன்ற நிறுவனத்தின் நுகர்வோரை நிச்சயமாக பாதிக்கும்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்அமானுஷ்யம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக