Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 நவம்பர், 2020

ஆன்லைன் டிரேடிங்கில் நட்டம்.. பைக்கில் அமர்ந்தபடியே தீக்குளித்த நபர்!

கோயம்புத்தூரில் ஆன்லைன் டிரேடிங்கில் நட்டம் அடைந்ததால், சம்மந்தப்பட்ட டிரேடிங் நிறுவனம் மும்பே நபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அண்ணா சாலை அருகே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது ஃபார்ச்யூன் டிரேடிங் நிறுவனம். இந்த நிறுவனத்தில் நஞ்சுண்டபுரம் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவர் கடந்த ஒரு ஆண்டுகளாகவே முதலீடு செய்து லாபம் ஈட்டி வந்துள்ளார்.

நல்ல லாபம் கிடைத்ததால் தனது முழு நேர வேலையே அதுதான் என்று மாறியுள்ளார். இந்நிலையில் கொரோனா ஆலத்தில் அவர் செய்த முதலீடுகள் நட்டத்தை அளித்துள்ளன.

இதனால் கடந்த சில நாட்களாகவே மன உலைச்சலிலிருந்த தனபால், விட்டில் தான் தற்கொலை செய்துகொள்ள உள்ளதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, விரக்தியில் டிரேடிங் நிறுவனம் முன்பு வாகனத்தில் அமர்ந்தபடி தீக்குளித்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க, தனபால் அங்கேயே கருகி உயிரிழந்துள்ளார். இவரது மனைவி அரசு பள்ளி ஒன்று தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

தனபால் நட்டம் அடைந்ததற்கு என்ன காரணம், நிறுவனத்தின் தரப்பில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா, எவ்வளவு முதலீடு செய்து இருந்தார், எவ்வளவு நட்டம் அடைந்திருந்தார் என்று எல்லாம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக