Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 18 நவம்பர், 2020

அரியர் தேர்வு எழுதித்தான் ஆகணும்: யுஜிசி திட்டவட்டம்!

 

கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களால் கல்லூரிகளுக்கு வந்து தேர்வு எழுத முடியாத சூழல் நிலவியது. இதனால் அரியர் தேர்வுகளுக்கு பணம் கட்டிய அத்தனை மாணவர்களும் ஆல் பாஸ் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. 


இதனால் அரியர் தேர்வு எழுத இருந்த மாணவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர். பல இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஆனால் கல்வியாளர்கள் மத்தியில் இதற்கு அப்போதே அதிருப்தி நிலவியது.

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என கூறிவந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் திட்டவட்டமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

அண்ணாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் சார்பாக அரியர் தேர்வுகளை ரத்து செய்வது விதிகளுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டிய அவசியல் குறித்து கூறப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதில் பல்கலைக்கழக மானியக்குழு சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட கூடுதல் பதில் மனுவில் அரியர் தேர்வுகளை கண்டிப்பாக நடத்த வேண்டும், தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதான வழக்கின் விசாரணை நாளை மறுதினம் வரவுள்ளதால் அதோடு சேர்த்து விசாரிக்கும் விதமாக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக