Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 நவம்பர், 2020

விளக்கெண்ணெய் மலச்சிக்கலை தீர்க்கும். ஆனா இப்படிதான் பயன்படுத்தணும்!

மலச்சிக்கல் பிரச்சனை உடனடியாக தீர்வு காணாவிட்டால் அது தீவிரமாக்கி விடும். அதற்கு விளக்கெண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.


மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கும் போது முன்னோர்கள் முதலில் தீர்வுக்கு பயன்படுத்துவது விளக்கெண்ணெய் தான். மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உடலில் கழிவுகள் தேங்கிவிடக்கூடும். இதனால் உடலில் சோர்வு உண்டாக கூடும். இந்நிலையில் மலச்சிக்கலை அதிகரிக்க விடக்கூடாது. குடல் இயக்கங்கள் மெதுவாகும் போது உண்டாகும் மலச்சிக்கலை அலட்சியம் செய்யும் போது அவை மேலும் மேலும் தீவிரமாகி மூலம் வரை உண்டாக்கிவிடும்.

கர்ப்பிணிகள் தவிர மற்றவர்கள் மலச்சிக்கல் பிரச்சனை கொண்டிருக்கும் போது விளக்கெண்ணெய் மூலம் பாதிப்பில்லாமல் தீர்வு காண முடியும். எப்படி என்ன மாதிரி எடுக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

​காலை நேர மசாஜ் செய்யுங்கள்

குடல் இயக்கக்கள் சீராக இருந்தால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. மலம் இளக்கமாக இருக்கும். எளிதாக வெளியேறக்கூடும், குடல் இயக்கங்களை சீராக்க வயிற்று தசைபகுதியில் மசாஜ் செய்யலாம்.

மலச்சிக்கல் இருக்கும் போது காலையில் எழுந்தவுடன் பத்துநிமிடங்கள் மசாஜ் செய்யலாம். ஆமணக்கு எண்ணெயை அரை அல்லது ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து கைகளில் குழப்பி தொப்புள் தொப்புளை சுற்றி நன்றாக வட்ட வடிவில் தேய்த்து மிதமாக மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.ஐந்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்தால் போதுமானது. இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பும் மசாஜ் செய்யலாம்.

விளக்கெண்னெய் குடல் இயக்கங்களை எளிதாக்கி மலத்தை மென்மையாக்கி உடைத்து எளிதாக வெளியேற்ற உதவுகிறது. எல்லோருமே செய்யலாம். சிறு வயதினர் மற்றும் பெரியவர்கள் மிக குறைந்த அளவு எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்தால் நிச்சயம் மலச்சிக்கலிலிருந்து விரைவில் விடுதலை கிடைக்கும்.

​ஆரஞ்சு பழச்சாறுடன் விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் அடர்த்தி நிறந்தது பிசுபிசுப்பும் அடர்த்தியும் கொண்டது. இதை அப்படியே குடிக்க முடியாது. இதை வேறு பொருள்களுடன் சேர்த்து குடிக்கலாம். மலச்சிக்கல் இருப்பவர்கள் தினம் ஒரு டம்ளர் வரை குடித்தால் போதுமானது.

ஆரஞ்சு பழச்சாறு ஒரு டம்ளர் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு விளக்கெண்ணெய் சேர்த்து குடிக்கலாம். ஆரஞ்சு சாறு நார்ச்சத்து நிறைந்தது. அதிக நார்ச்சத்து மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது. விளக்கெண்ணெய் மலத்தை இளக்கி உடலில் இருந்து எளிதாக வெளியேற்ற உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்க இதை 7 நாட்கள் வரை தொடர்ந்து குடிக்கலாம்.

​எலுமிச்சை சாறுடன் விளக்கெண்ணெய்

எலுமிச்சை சாறிலும் விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம். எலுமிச்சை சாறு பிழிந்து ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் அளவு விளக்கெண்ணெய் சேர்த்து குடிக்கலாம்.எலுமிச்சை அமிலதன்மை கொண்டது. இது உடலில் நீர்ச்சத்து அதிகரித்து குடல் இயக்கங்களை துரிதப்படுத்துகிறது.

மேலும் விளக்கெண்ணெய் கசப்பு சுவை எலுமிச்சையின் அமில சுவை மட்டுப்படுத்தி விடும். தினமும் இரண்டு டம்ளர் வரை இதை குடிக்கலாம். எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து குடிக்கும் போது இதை மாலை வேளையில் தவிர்க்க வேண்டும்.

நீராகாரத்துடன் விளக்கெண்ணெய்

இதைதான் முன்னோர்கள் காலத்தில் செய்துவந்தார்கள். வடித்த சாதத்தில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை வடித்து விளக்கெண்ணெய் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். ஒரு டம்ளர் அளவு குடித்தால் வயிறு சுத்தமாகும் அளவு மலம் இளகி வெளியேறும். இதை தினமும் குடிக்க கூடாது.

நீராகரம் மற்றும் விளக்கெண்ணெய் இரண்டின் குளுமையும் சேர்ந்து விடும். அதே நேரம் மலச்சிக்கல் இல்லாதவர்களும் மாதம் ஒருமுறை இப்படி குடித்துவந்தால் மலச்சிக்கல் எப்போதும் இல்லாமல் இருக்கும். மழைக்காலங்களில் மட்டும் இதை கவனமாக எடுக்க வேண்டும்.

இரவு நேர மசாஜ் செய்யுங்கள்

மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும் போது உடல் சோர்வும் இருக்கும் என்பதால் அதற்கு மசாஜ் செய்ய வேண்டியது அவசியம். மலச்சிக்கல் பிரச்சனையோடு வயிற்றுவலியும் இருந்தால் அவர்களுக்கு இந்த இரவு நேர மசாஜ் நன்மை பயக்கும். இரவு தூங்கும் போது விளக்க்கெண்ணெயை வயிற்றில் தடவி ஹாட் பேக் ஒத்தடம் கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இந்த மசாஜ் செய்யலாம். தரமான எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்பதில் மட்டும் கவனம் இருக்க வேண்டும்.

இது குடல் இயக்கங்களை சீர் படுத்தும். கடினமான மலத்தை இறுக்கி எளிதாக வெளியேற்ற உதவக்கூடும். செரிமான மண்டலம் சீராகும். மலச்சிக்கல் கட்டுக்குள் வரும் வரை இதை செய்யலாம்.

எப்படி செயல்படுகிறது

விளக்கெண்ணெய் ஒழுங்கற்ற குடல் இயக்கங்களை சீராக்க செய்யும். மலக்குடலில் மலம் இறுக்கமாக சிக்கி கொள்ளும் போது அதை எளிதாக வெளியேற்ற விரும்பும் போது குடல் இயக்கங்கள் சீராக செயல்பட வேண்டும். இல்லையெனில் மலச்சிக்கல் என்று சொல்லலாம்.

விளக்கெண்ணெயில் ரிசினோலிக் அமிலம் உண்டு. இது குடல் சுவர்களில் தசைகளில் இணைகிறது. இது குடல் சுருக்கங்களைஇ உண்டாக்கி மலத்தை வெளியே தள்ள செய்கிறது. இதனால் மலம் வெளியேறுகிறது. மேலும் இது குடலை சுத்தம் செய்து மலச்சிக்கலை இல்லாமல் செய்கிறது. குடலில் ஈரப்பதம் இருந்தால் அது மலத்தை வெளியேற்ற உதவும். அந்த ஈரத்தன்மையை விளக்கெண்ணெய் அளிக்கிறது. 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக