🌟 துலாம் ராசியின் அதிபதி சுக்கிரபகவான் ஆவார். அசுர குருவான சுக்கிராச்சாரியாரை தேவகுருவான பிரகஸ்பதி பகையாகவே எண்ணுகின்றார். இதனால் இங்கு பகை என்ற நிலையில் அவர் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
🌟 கண் மூடித்தனமான நம்பிக்கையால் பல செயல்களில் ஈடுபட்டு அவர்களே பிரச்சனைகளை தேடிக்கொள்வார்கள்.
🌟 எண்ணற்ற வாழ்க்கை பாடங்களை கற்றாலும் அதை விட்டு ஒதுங்காமல் அதிலேயே திரும்ப ஈடுபடுவார்கள்.
🌟 எவருடைய ஆலோசனையையும் அவ்வளவு எளிதில் ஏற்க மாட்டார்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள்.
🌟 மற்றவர்களை குறைத்து தன்னை முன்னிலைப்படுத்தி பேசக்கூடியவர்கள்.
🌟 பிறரை பயமுறுத்தி தனது காரியத்தை முடித்துக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 எந்த செயலானாலும் முன்னால் நிற்பார்கள். ஆனால், எவ்விதமான வேலையையும் செய்யாமல், மற்றவர்கள் செய்த வேலையை தான் செய்ததாக கூறி பெருமை பேசிக்கொள்வார்கள்.
🌟 எதை வேண்டாம் என்று சொல்கிறோமோ அதை வேண்டும் என்று செய்யக்கூடியவர்கள்.
🌟 யாரையும் ஏன் தன்னையும் நம்பாதவர்கள். உடன் இருப்பவர்கள் அனைவரையும் சந்தேக உணர்வுடன் பார்க்கக்கூடியவர்கள்.
🌟 எங்கெல்லாம் கடன் கிடைக்குமோ அங்கெல்லாம் கடன் வாங்கி கொள்ளக்கூடியவர்கள். இவர்களிடம் கடனை திருப்பி வாங்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.
🌟 நிதானமற்ற பேச்சுகளாலும், மற்றவர்களை மதிக்காத குணத்தாலும் அதிக எதிரிகளை உருவாக்கிக்கொள்வார்கள்.
🌟 இவர்களின் வாழ்க்கையில் போராட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. உடன் இருப்பவர்கள் மூலமே பல இன்னல்கள் தோன்றினாலும் அவர்களின் புகழ்ச்சியில் மயங்கக்கூடியவர்கள்.
🌟 வாக்குவன்மை உடையவர்கள். பேச்சால் எதிரில் இருப்பவரை கதிகலங்க வைக்கக்கூடியவர்கள்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக