Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 1 ஜனவரி, 2021

கொரோனா கவலையே இல்லை, கோவையில் வாட்ச் சானிடைசர் அறிமுகம்!

கொரோனா வைரசிடமிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் இப்போதைய நேரத்தில் நமது கண்டுபிடிப்புகள் அனைத்தும் இந்த கொரோனா பாதுகாப்பு வழிமுறையை எளிமையாக்குவதாகவே அமைகிறதுஇந்த ஆய்வுகளில், ஒரு மைல் கல்லாகக் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று சானிடைசர்களை எளிமையாக கைகளில் தெளிக்கும் 3 இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவால் கட்டாயம்!

ஆம் கொரோனா என்ற வைரஸ் கொடிய நோயாக உலகை வலம் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அனைவரும் சுகாதாரத்தைக் கண்டிப்பாகப் பேணி ஆக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

எளிமையாக்கும் கண்டுபிடிப்புகள்...

குறிப்பாக கைகளை அவ்வப்போது சுத்தம் செய்வது, கிருமி நாசினி பயன்படுத்துவது உள்ளிட்ட பழக்கங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதை உறுதி செய்யும் வகையில் கோவை பீளமேடு பகுதியில் செயல்படும் ரோபோடெக்ஸ் என்ற தனியார் நிறுவனம் 3 இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

என்னது சானிடைசர் வாட்ச்சா..!

முதலாவது கைக்கடிகார வசதியுடன் உள்ளது. இதில் நாம் 15மில்லி சானிடைசரை நிரப்பி, தேவையான நேரத்தில் கைகளில் எளிதாகத் தெளித்துக் கொள்ளலாம். 15மில்லி சானிடைசரை நிரப்பினால், 15 முறை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 399 என்றும் ஆன்லைனில் கிடைக்கும் என்றும் நிறுவனத்தினர் தகவல் அளித்துள்ளனர்.

அதுமட்டுமில்லை, பணத்தையும் சுலபமா எண்ணலாம்!

 

மற்றொன்று பணத்தைச் சுத்தம் செய்யும் இயந்திரம். இதில் 300 மில்லி கிருமி நாசினி நிரப்பிக் கொள்ளலாம். அப்படிச் செய்வதன் மூலம் ஆயிரத்து 500 பணத்தாள்கள் சுத்தம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 999 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு சூப்பராக இருக்கும் என எதிர்பார்ப்பு!

இதுபோலவே அதிக கொள்ளளவு கொண்ட பணத்தைச் சுத்தம் செய்யும் இயந்திரம் மற்றொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விலை ரூ. 5 ஆயிரத்து 999 ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறும் என நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

விரைவில் ஆன்லைன் விற்பனை!

கோவையில் அறிமுகப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள், விரைவில் ஆன்லைன் விற்பனைக்கு வந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் தொடர்பான அறிமுக விழாவில் பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜோதி முருகன், “5ஆம் வகுப்பு படிக்கும் எனது மகன் பிரணவ் மனதில் ஏற்பட்ட தேடல் காரணமாகவே, இந்த இயந்திரங்கள் இப்போது அறிமுகப்பட்டுள்ளன” எனப் பெருமையோடு கூறினார்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!