Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

ரயிலை போன்று விமானத்தில் சீட்டுக்கு அடியில் படுத்து உறங்கிய பயணி..!

 Image result for ரயிலை போன்று விமானத்தில் சீட்டுக்கு அடியில் படுத்து உறங்கிய பயணி..!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


அமர்ந்து கொண்டே தூங்குவதற்கு சங்கடப்பட்ட ஒரு பயணி, விமானத்தின் இருக்கைக்கு அடியில் படுத்து உறங்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
நம்மில் பலர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டால், உடனே சுகதாரத்தை பேண தொடங்கிவிடுவோம். பொதுவெளியில் குப்பைகளை கண்டால் மூக்கை மூடுவது, மண் துகள் கண்ணில் படாமல் இருக்க கண்ணாடி போடுவது, மற்றவர்களை உரசாமல் பொதுவெளியில் நடப்பது என நம்மை பேணிக்காத்துக் கொள்வோம்.
குறிப்பாக, பொது போக்குவரத்து ஊர்திகளில் செல்லும் போது, சுத்தமாக இருப்பதில் அதிக கவனம் கொள்வோம். பலரும் வந்து செல்லும் இடம் என்பதால், இப்படி இருப்பது அடிப்படைத் தேவையாக மாறிப்போனது.
இந்நிலையில், விமானம் ஒன்றில் பயணி ஒருவர் இருக்கைக்கு அடியில் நெடுஞ்சாணக்கிடையாக படுத்து தூங்கிய புகைப்படம், இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விமானங்களில் பிசினஸ் கிளாஸ் எனப்படும், உயர் ரக வகுப்பில் மட்டுமே பயணிகள் உறங்கியவாறே பயணிக்கும் வசதி இருக்கும். மற்றபடி சாதாரண வகுப்பில் பயணிகள் உட்கார்ந்து கொண்டு தான் பயணிக்க வேண்டும்.
ஆனால் பேசன்ஜர் சேரிங் என்கிற இன்ஸ்டா பக்கத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில், விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணித்த பயணி ஒருவர், இருக்கைக்கு அடியில் தடாலடியாக படுத்தபடி தூங்கிக் கொண்டே சென்றுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள், அவருக்கு சுத்தமே கிடையாது. பயணிகள் கால் வைக்கும் இடத்தில் எப்படி இவரால் தூங்கிக் கொண்டே வர முடிகிறது. இதை பார்த்த விமான ஊழியர்கள் எதுவும் சொல்ல வில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொதுவாக ரயில்களில் முன்பதிவு பெட்டிகளை தவிர, பொதுப் பெட்டியில் பயணிக்கும் பயணிகள், இடப்பற்றாக்குறை மற்றும் கூட்டம் காரணமாக சீட்டுக்கு அடியில் படுத்து உறங்கிவிடுவது உண்டு. அதை போலவே இவர் விமானத்தில் படுத்துள்ளதாக சிலர் கூறியுள்ளனர்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் வேறு சிலர், அந்த பயணி மதுபோதையால் காரணமாக இப்படி விமானத்தில் உறங்கியபடி வந்திருக்கலாம் என இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். எனினும், அந்த பயணியின் நடவடிக்கைக்கு உண்மையான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை.

இதற்கிடையில் குறிப்பிட்ட அந்த பயணியிடம் விசாரித்த போது, இருக்கையில் உட்கார்ந்து தூங்குவதற்கு சங்கடமாக இருந்ததை அடுத்து, அவர் தரையில் படுத்துவிட்டதாக தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும், அது தொடர்பாக எந்த தகவலும் உறுதியாக தெரியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக