Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

ISRO : Chandrayaan ரகசியத்தை வெளியிடுவதாக கூறி பாக். அமைச்சரை பங்கம் செய்த தமிழர் - வைரலாகும் ஸ்கிரன் ஷாட்கள்...!

samayam tamil

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

பாக்., அமைச்சரின் தமிழர் ஒருவர் ட்விட்டரில பேசியதாக வைரலாகும் ஸ்கிரீன் ஷாட்களில் பாக்., அமைச்சரிடம் இஸ்ரோ ரசிகயத்தை வெளியிடுவதாக கூறி அவரை பங்கமாக கலாய்த்தது வெளியாகியுள்ளது. இது உண்மையா பொய்யா என்ற தகவல் தெரியவில்லை


இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இஸ்ரோவின் சாதனைகளை உலகமே வியந்து பார்த்து வருகிறது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் இஸ்ரோவின் ஆய்வுகளை நுணுக்கமாக ஆராய்ந்து வருகிறது.

அந்த அளவிற்கு விண்வெளியில் இந்திய மிக பெரிய அளவில் கோலோச்சி வரத்துவங்கிவிட்டது. சமீபத்தில் இந்தியா சந்திரயான் -2 விண்கலத்தின் நிலவின் தென்துருவ பகுதிக்கு அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ள முயற்சித்தது.

சந்திரயானின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட சிறிய கோளாறால் தகவல் துண்டிக்கப்பட்டது. தற்போது அதை மீட்கும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் பாக்., நாட்டின் ஃபாவத் சவுரி அமைச்சர் இன்று வரும் 2022ம் ஆண்டு பாக்., விண்வெளிக்கு ஒரு மனிதனை அனுப்பவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இந்த செய்திக்காக இந்தியாவில் பலர் அவரை கிண்டல் செய்திருந்தனர்.

இந்நிலையில் ட்விட்டரில் பாக்., ஒரு இந்தியரிடம் சேட் செய்தததாக சில ஸ்கிரீன் ஷாட்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன் படி இந்தியர் ஒருவர் பாக். அமைச்சரை ட்வீட்டர் சாட்டிங் மூலம் தொடர்பு கொண்டு தனது மாமா இஸ்ரோவில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், ஆனால் அவரது பணிக்கு அங்கு மரியாதையே கிடைப்பதில்லை எனவும்,

அவர் தற்போது இஸ்ரோ குறித்த சில தகவல்களைத் தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார். அதற்கு அவர் நீங்கள் இந்தியரா எனக் கேட்டிருந்தார். அதற்கு இவர் தான் ஒரு தமிழன் எனச் சொன்னார்.



பதிலுக்கு பாக்., அமைச்சர் என்னிடம் எதற்கு இதைச் சொல்கிறீர்கள், நான் எப்படி உங்களை நம்புவது என கேட்டார். அதற்கு நம்மூர் தமிழர் நான் எப்படி உண்மையானவன் என நிரூபிக்க முடியும் எனத் தெரியவில்லை எனப் பதிலளித்தார்.

அதற்கு பாக். அமைச்சர் ஐடி அனுப்புமாறு கேட்டார். அதற்கு அந்த தமிழர் இமெயில் ஐடியை அனுப்பியபோது பாக்., அமைச்சர் நான் இமெயில் ஐடியை கேட்கவில்லை. ஐடி ப்ரூப் அனுப்புங்கள் என கேட்டார்.

அதற்கு அந்த பெயர் தெரியாத தமிழர் தான் ஐடி ப்ரூபை எல்லாம் சேர் செய்ய முடியாது. எனது மாமாவிற்கு இஸ்ரோவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை அதனாலேயே இதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவர் இஸ்ரோவின் அடுத்த திட்டமான சந்திரயான் -3யின் தலைமை பொறுப்பில் இருப்பவர் எனப் பதிலளித்தார்.



பாக். அமைச்சர் அதை பார்த்துவிட்டுச் சரி தொடருங்கள் எனக் கேட்டபோது அவர் இஸ்ரோ சந்திரயான் 3 என் திட்டமாக நிலவிற்கு ஒரு மனிதனை அனுப்பும் திட்டமாக வடிவமைத்துள்ளதாகவும், அதுவும் சந்திரயான் 2 விற்கு ஆன செலவிலிருந்து 10ல் ஒரு பங்கு குறைவான பணத்தில் அதை அனுப்ப அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

அதை புரிந்து கொண்ட பாக்., அமைச்சர் சுமார் ரூ90 என போட்டார். அதன் பின் அதற்கு பதிலளித்த தமிழர் தற்போது தன் மாமா அந்த மாடலின் ப்ரோட்டோ டைப்பை பாக்.,கிற்கு வழங்க விரும்புவதாகவும் அதற்குப் பதிலாக அவர் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

உடனடியாக அதற்கு பதிலளித்த பாக்., அமைச்சர் அதை எனக்கு அனுப்புங்கள், பாக்., அவருக்கான அங்கீகாரத்தை வழங்கும் எனப் பதிலளித்தார். பின்னர் அந்த தமிழர் இதை பாதுகாப்பாக வைத்திருங்கள். இது அவரது கடின உழைப்பு என குறிப்பிட்டுவிட்டு



கிண்டலுக்காக பாக்., கொடியுடன் பைக்கில் ராக்கெட் செய்து மாட்டி ஒரு நபர் அமர்ந்திருக்கும், பொதுவாக பாகிஸ்தானைக் கிண்டல் செய்ய பயன்படுத்தப்படும் புகைப்படத்தை அனுப்பி இது தான் இஸ்ரோ சந்திரயான் 2 விட 10 மடங்கு குறைவான செலவில் அதே நேரத்தில் 5 மடங்கு அதைவிட ஆற்றல் மிக்கதாக உருவாக்கப்பட்ட டிசைன் எனக் குறிப்பிட்டார்.



இதைப் பார்த்து காண்டான பாக்., அமைச்சர் கோபமாகப் பதிலளித்துவிட்டு அவரை பிளாக் செய்து விட்டார்.

தற்போது வைரலாகி வரும் இந்த ஸ்கிரின் ஷாட்டில் இருக்கும் தகவல்கள் உண்மையில் நிகழ்ந்ததா அல்லது போட்டோஷாப் செய்யப்பட்டதா என்ற தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.

இருந்தாலும் பலர் இதை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையாகவும் இருக்கலாம் அதே நேரத்தில் பொய்யாக இருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக