--------------------------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!
--------------------------------------------------------
ஒருவர் : ஓட்டப்பந்தயமெல்லாம் வெச்சு வேலைக்கு ஆள் எடுத்துக்கிட்டு இருக்காங்களே போலீஸ் வேலைக்கா?
மற்றொருவர் : நீங்க வேற பைனான்ஸ் கம்பெனிக்கு!
ஒருவர் : 😜😜
--------------------------------------------------------
டாக்டர் : வாயில் என்ன கட்டு?
நோயாளி : எனக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க?
டாக்டர் : 😷😷
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
--------------------------------------------------------
நம் செயல்களில் நம்மை நம்புவது - நம்பிக்கை...
அடுத்தவரை நம்புவது - எதிர்பார்ப்பு...
எதிர்பார்ப்பு வீணாகும்...
நம்பிக்கையே எப்போதும் கைகொடுக்கும்...
கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை...
கல்தான் காணாமல் போகிறது...
விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும்...
நாம் கடலாக இருப்போம்...!!
தேடலை குறைத்துக்கொள்...
நிம்மதியாவாய்...
எதிர்பார்ப்பை தொலைத்துக்கொள்...
சந்தோஷமாவாய்...
அதிக பேச்சை நிறுத்திக்கொள்...
தேடப்படுவாய்...!!
--------------------------------------------------------
யாருக்கு வேலை அதிகம்?
--------------------------------------------------------
வேலைக்கு போறவங்களுக்கு வேலை செய்ற இடத்துல மட்டும்தான் பதில் சொல்லணும்....
ஆனா..
வேலைக்கு போகாதவங்களுக்கோ பாக்குறவங்களுக்கெல்லாம் பதில் சொல்லணும்...
இப்போ சொல்லுங்க யாருக்கு வேலை அதிகம்.😜😜
--------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
--------------------------------------------------------
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
விளக்கம் :
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாது. அதைப்போல் வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலை பொறுத்து கொள்வது.
--------------------------------------------------------
ஓரெழுத்து ஒருமொழி!!
--------------------------------------------------------
தே - நாயகன், தெய்வம், அருள், தேடு
தை - மாதம், தையல்
நா - நாக்கு, சொல், நான்
நீ - நின்னை, தள்ளு
நே - அன்பு, நேயம்
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக