---------------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
---------------------------------------------------
மணி : என்ன குவாலிட்டி இருக்கு சார்... வரவர ஒன்னுலயும் குவாலிட்டியே இல்ல.
கவின் : என்ன சார் ஆச்சு? ஏன் சலிச்சுக்கிறீங்க?
மணி : சீகக்காய், ஷாம்பூ, சோப்பு எல்லாம் போட்டும், நைட் அடிச்ச சரக்கோட நாத்தம் போகமாட்டேங்குதே!
கவின் : 😱😱
---------------------------------------------------
ஆசிரியர் :Good Night" என்பதை தமிழில் கூறு..
மாணவன் : 'கொசு வத்தி" சார்...
ஆசிரியர் : 😟😟
---------------------------------------------------
உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா !!
---------------------------------------------------
1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.
2. உங்களுக்கு தமிழ் தெரியும்.
3. உதடு பிரிக்காம 'ப"-னு சொல்ல முடியாது.
4. சொல்லி பாத்துகிட்டீங்க.
6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.
7. சிரிச்ச சிரிப்புல 5ம் நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.
8. நம்பர் 5 இருக்கா?-னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.
9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க... ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.
10. அடுத்தவங்களுக்கும் கூப்பிட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு 'பகிர்"
அந்த 5-வது விஷயம் என்னன்னு கேக்குறீங்களா?
அட இப்போ 5 Star Review போடுவீங்க பாருங்க அதான், ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க...!
---------------------------------------------------
சிறந்த பொன்மொழிகள்..!
---------------------------------------------------
👉 உபதேசம் என்பது கூட்டத்தில் மட்டுமே எடுபடும்.
👉 தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததில்லை. விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.
👉 பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை.
👉 பொறுப்பானது கனவுகளில் இருந்தே தொடங்குகிறது.
👉 நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடிவரும்.
---------------------------------------------------
விடுகதைகள்...!!
---------------------------------------------------
1. ஆளுக்கு துணை வருவான். ஆனால் அவன் பேச மாட்டான். அவன் யார்?
விடை : நிழல்.
2. உணவை கையில் எடுப்பான். ஆனால் உண்ண மாட்டான். அவன் யார்?
விடை : அகப்பை.
3. அரங்கினில் ஆடாதவள், கிளைகளில் அரங்கேற்றம் நடத்துவாள். அவள் யார்?
விடை : தென்றல்.
4. தொடப் பார்த்தேன் எட்டிச் சென்றது, பறந்து பார்த்தேன் விரிந்து சென்றது. அது என்ன?
விடை : வானம்.
5. உலக உயிர்களுக்கெல்லாம் ஒரே உற்சாக பானம். அது என்ன?
விடை : தண்ணீர்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக