-------------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!!
-------------------------------------------
ராமு : நேத்து நான் உன் வீட்டுக்கு வந்தப்ப டி.வி.-ல சீரியல் பாத்து அழுதுகிட்டிருந்த... சீரியல் பார்த்து அழுவுற முதல் ஆம்பிளை நீதான்டா.
சோமு : டேய்! அது சீரியல் இல்லடா. என் கல்யாண CD டா!
ராமு : 😄😄
-------------------------------------------
பாலு : என்ன சார் பெட்ரோல் டேங்கை ஓபன் பண்ணிட்டு சிரிக்கிறீங்க?
கிருஷ்ணன் : மனசு விட்டு சிரிச்சா ஆயில் கூடுமின்னு சொன்னாங்க அதான்!
பாலு : 😛😛
-------------------------------------------
கடவுளிடம் மனிதன் கேட்டான்...!!
-------------------------------------------
பொண்ணுங்க எல்லாம் நல்லா இருக்காங்க...
ஆனா பொண்டாட்டிகள் மட்டும் ஏன் இப்படி கொடுமைப் படுத்துறாங்க?
கடவுள் சொன்னார்,
'நான் பொண்ணுங்களை மட்டும் தான் படைத்தேன்."
அவங்களைக் கட்டிக்கிட்டுப் பொண்டாட்டியா ஆக்கிக்கிட்டது நீங்கதான்.
-------------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------------
1. வெளிச்சத்தில் பிடிபட்டவனுக்கு இருட்டில் விடுதலை. அவன் யார்?
2. காலடியில் கிடக்கிறானே என்று இவனை உதைக்க முடியாது. அவன் யார்?
3. வெளியில் விரியும், வீட்டில் சுருங்கும். அது என்ன?
4. தட்டினால் பறப்பான், தடவினால் சாவான். அது என்ன?
விடை :
1. போட்டோ
2. முள்
3. குடை
4. கொசு
-------------------------------------------
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...!!
-------------------------------------------
இதில் எது புத்திசாலி?
◼ சதுரம்
⚫ வட்டம்
விடை :
சதுரம் தான் புத்திசாலி ஏனென்றால் அதுக்கு 4 மூலைகள் இருக்கிறதாம்.
-------------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------------
பாக்கு மரத்தில் பாக்கு இருக்கும்...
தேக்கு மரத்தில் தேக்கு இருக்கும்...
ஆனா பன மரத்தில் பணம் இருக்குமா?😎😇😇
பொழுதுபோக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக