![]()
இருப்பதை விட்டுட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே
என்று ஒரு கூட்டம் கூறினால், மலையேற நினைத்தால் தான் குன்றாவது ஏற முடியும் என்று
அதற்கு பதிலடி கொடுக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது! பேக் டூ தி ப்யூச்சர்
போன்ற Sci-Fi திரைப்படங்களை பார்த்துவிட்டு பறக்கும் கார்களுக்கு ஆசைப்பட்டதின்
விளைவாகத்தான் ஆட்டோனமஸ் கார்கள் (அதாவது தானியங்கி வாகனங்கள்) சாத்தியமாகி
உள்ளது.
ஒத்தையடி பாதை வழியாக வளர்ச்சியை தூக்கிக்கொண்டு போன காலம் மாறி, ஆக்ரோஷமான
மற்றும் புதுமையான தொழில்நுட்பங்கள் - அற்புதமான கண்டுபிடிப்புகளை உருவாக்கவும்,
அதன் வழியாக நம் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், அதிக உற்பத்தி செய்வதற்கும்
சூப்பர் பாஸ்ட் ஹைவெஸை போட்டுக்கொடுத்துள்ளது என்றே கூறலாம். அப்படியான அற்புதமான
கண்டுபிடிப்புகளில் ஒன்று - தானியங்கி கார்கள்!
தானியங்கி கார் - என்றால் என்ன?
தானியங்கி கார் என்பது ஓட்டுநர் இல்லாத (driverless) அல்லது சுயமாக வாகனத்தை
ஓட்டும் (self-driving) ஒரு கார் ஆகும். அதாவது தானியங்கி கார் என்பது மனித
ஆபரேட்டர் இல்லாத நிலையில் பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு வாகனம் ஆகும்.
இந்த அற்புதமான கண்டுபிடிப்பு பெரும்பாலான மக்களை "ஆஹா" என்று சொல்ல
வைத்தாலும் கூட, ஏனையோர் இந்த தானியங்கி வாகனம் இன்னும் குறைபாடுகளுடன் தான்
உள்ளது என்கிறார்கள்.
குறையா? என்ன குறை? என்பதை பற்றி அறிந்துகொள்ளும் முன், தானியங்கி வாகனங்களில்
உள்ள நிறைகளை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும் அல்லாவா?
நிறைகள்:
1. விபத்துக்களின் எண்ணிக்கை குறையும்!
ஒரு கம்பியூட்டர் வாகனத்தை கட்டுப்படுத்துவதால் தானியங்கி கார்கள் மனித பிழைகள்
ஏற்படாமல் தடுக்கின்றன. எதிர்பாராத குறுக்கீடுகளுக்கு ஆளாகக்கூடிய மனிதர்களைப் போல
இது கவனச்சிதறலுக்கு வாய்ப்பளிக்காது. தானியங்கி கார்கள் மற்றொரு வாகனத்திற்கு
இடையேயான சரியான தூரத்தையும், நிறுத்த தூரத்தை கட்சித்தமாக தீர்மானிக்கும்
என்பதால், சாலை விபத்துக்கான வாய்ப்புகள் வியத்தகு முறையில் குறையும்.
2. போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்கும்!
ஒரு குழுவில் டிரைவர் இல்லாத கார்கள் படைப்பிரிவில் பங்கேற்கின்றன. இது வாகனங்களை
ஒரே நேரத்தில் பிரேக் செய்ய அல்லது துரிதப்படுத்த அனுமதிக்கிறது. பிளாட்டூன்
அமைப்பு தானியங்கி நெடுஞ்சாலை அமைப்பை அனுமதிக்கிறது, இது நெரிசலைக் கணிசமாகக்
குறைக்கும் மற்றும் பாதை திறனை அதிகரிப்பதன் மூலம் போக்குவரத்தை மேம்படுத்தலாம்.
தன்னாட்சி கார்கள் ஒருவருக்கொருவர் நன்றாக தொடர்பு கொள்கின்றன. போக்குவரத்து
சிக்கல்களை ஆரம்பத்தில் அடையாளம் காண அவை உதவுகின்றன. இது சாலை சரிசெய்தலைக்
கண்டறிந்து உடனடியாக மாற்றுப்பாதையை மாற்றுகிறது. இது வாகன ஓட்டிகளிடமிருந்து கை
சமிக்ஞைகளையும் எடுத்து அதற்கேற்ப செயல்படுகிறது.
3. மன அழுத்தமில்லாத பார்க்கிங்!
தானியங்கி கார்கள் நீங்கள் இறங்கவேண்டிய இடத்தில் உங்களை இறக்கிவிட்டுவிட்டு,
கண்டறியப்பட்ட காலியாக உள்ள பார்க்கிங் இடத்திற்கு நேரடியாக செல்கின்றன. இது காரை
பார்க்கிங் செய்ய காலியாக உள்ள ஒரு இடத்தை தேடும் நேரத்தை சேமிக்கிறது.
4. உங்களுடைய நாளின் பெரும்பாலான நேரத்தை
மிச்சப்படுத்தும்!
காரை இயக்க சிஸ்டமே கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதால், ஓட்டுநருக்கு எந்த வேலையும்
இருக்காது மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த அச்சமும் இருக்காது. எனவே பயண
நேரத்தின் போது பேருந்தில் அல்லது ரயிலில் அல்லது விமானத்தில் பயணிப்பது போல
நீங்கள் உங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை உருவாக்கி கொள்ளலாம், உங்கள்
அன்புக்குரியவர்களிடம் நேரம் செலவிடலாம் அல்லது ஓய்வு கூட எடுத்துக்கொள்ளலாம்.
5. அனைவருக்குமான போக்குவரத்துக்கு அணுகல்!
பெரும்பாலான சமயங்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாகனம்
ஓட்டுவதில் சிரமப்படுகிறார்கள். தானியங்கி வாகனங்கள் பாதுகாப்பான, அதே சமயம்
சிரமம் இல்லாமல் அனைவரும் அணுக கூடிய போக்குவரத்தை உறுதி செய்கின்றன.
குறைகள்:
1. விலை உயர்ந்தது!
உயர் தொழில்நுட்ப வாகனங்கள் மற்றும் உபகரணங்களின் விலை மிகவும் அதிகமாக இருக்கும்.
ஒரு தானியங்கி காருக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும், மென்பொருள்,
மாற்றியமைக்கப்பட்ட வாகன பாகங்கள் மற்றும் சென்சார்கள் போன்ற மிகச்சிறந்த மற்றும்
மிகவும் செயல்பாட்டுப் பொருள்களைத் தேர்ந்தெடுப்பதிலும் மிகப்பெரிய செலவுகளை செய்ய
வேண்டி இருக்கும். எனவே, எல்லோராலும் தானியங்கி கார்களை வாங்க முடியாது,
பயணிக்கவும் முடியாது. இருப்பினும் இது தற்கால நிலைப்பாடு தான். அடுத்த 10 முதல்
15 ஆண்டுகளுக்கு பின் தானியங்கி கார்களின் விலை குறைந்துவிடக்கூடும், அப்போது
சராசரி வருவாய் ஈட்டக்கூடிய நபர்களுக்கும் கூட தானியங்கி கார்கள் சொந்தமாகலாம்.
2. பாதுகாப்பு சார்ந்த கவலைகள்!
தானியங்கி கார்கள் வெற்றிகரமாக திட்டமிடப்பட்டிருந்தாலும், எதிர்பாராத தடுமாற்றம்
என்பது இன்னும் ஏற்படக்கூடிய ஒன்றாகவே உள்ளது. தொழில்நுட்பங்கள் தொடர்ச்சியாக
அப்டேட் ஆகிக்கொண்டிருந்தாலும் கூட, எல்லாமே வெற்றிகரமாக முடியவதில்லை. சில
நேரங்களில் சில சாதனங்கள் தவறான குறியீட்டைக் கொண்டிருக்கலாம்.
3. ஹேக்கிங் செய்யப்பட வாய்ப்புள்ளது!
தானியங்கி வாகனம் தொடர்ந்து உரிமையாளரின் விவரங்களைக் கண்காணிப்பதால் அவைகள்
ஹேக்கர்களின் அடுத்த (வருங்காலத்தில்) முக்கிய இலக்காக இருக்கலாம். இது தனிப்பட்ட
தரவின் சாத்தியமான சேகரிப்புக்கு வழிவகுக்கும்.
4. மனிதர்களுக்கான வேலை வாய்ப்புகளை பறிக்கும்!
செயற்கை நுண்ணறிவு - மனிதர்களின் பாத்திரங்களையும் பொறுப்புகளையும் மெல்ல மெல்ல
கைப்பற்றி வருவதால், பெரிய எண்ணிக்கையிலான தானியங்கி வாகனங்கள் டாக்ஸி, லாரிகள்
அல்லது இணை விமானிகளின் பணிகளை கூட பறிக்கலாம். ஏனெனில் அவர்களின் சேவைகள் இனியும்
தேவைப்படாது. இது ஒரு குறிப்பிட்ட நாட்டின் வேலைவாய்ப்பு வீதத்தையும் பொருளாதார
வளர்ச்சியையும் கணிசமாக பாதிக்கலாம்.
5. செயல்படாத சென்சார்கள்!
பெரும்பாலும் கடுமையான வானிலை நிலைகளில் சென்சார்கள் தோல்வி அடைகின்றன,
பழுதாகின்றன. பனிப்புயல் அல்லது கடுமையான பனிப்பொழிவின் போது சென்சார்கள் வேலை
செய்யாது. இந்த இடத்தில் தானியங்கி தொழில்நுட்பத்தையும் அவைகளின் சென்சர்களையும்
நாம் எப்படி நம்புவது? இந்த துறை இன்னும் தொடர்ந்து வளர வேண்டும் மற்றும்
எக்கச்சக்கமான சோதனைகளை நிகழ்த்த வேண்டும்.
தானியங்கி கார்கள் நமக்கு தேவையான குறிப்பிடத்தக்க வசதியை அளிக்கலாம். இருந்தாலும்
கூட அது இன்னமும் தனது குறைகளை முழுமையாக சரி செய்துகொள்ளவில்லை என்பதே உண்மை!
இதில் உங்கள் கருத்து ஏதேனும் இருப்பின் கமெண்ட் செய்யவும்!
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
இது
போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள்
போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம்
சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக