Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

முடி வெட்டியதற்காக போலீஸ் காரர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம், நடந்தது என்ன?

 

காவல் நிலையத்தில் முடி திருத்துபவரை வரவழைத்து முடி வெட்டியதற்காக லண்டன் காவலர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.லண்டனில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தொழில்முறை முடித்திருத்தும் நபரை முடி திருத்துவதற்காக அழைத்து காவலர்கள், காவல் நிலையத்தில் முடி திருத்தம் செய்து கொண்டதற்காக, காவல் அதிகாரிகளுக்கு 200 யூரோ அதாவது நம்ம ரூபாய்க்கு 20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் கிழக்கு லண்டனில் உள்ள பெத்னல் க்ரீன் காவல் நிலைய அதிகாரிகளால் நிகழ்ந்தது. அவர்கள் காவல் நிலையத்தில் நிரந்தரமான ஒரு முடித்திருத்தும் நபரை பணிக்கு அமர்த்தினர். ஆனால் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதற்காக அவர்களுக்கு 200 லண்டன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. போலிஸ் தனது அறிக்கையில் இதுக்குறித்து கூறும்போது

அந்த முடி திருத்தும் நபர் ஒரு துருக்கிய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும் அவர் ஒரு அதிகாரி தலைமுடியை வெட்ட தலா 10 யூரோ வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியாக 31 அதிகாரிகள் அவரிடம் முடி வெட்டியுள்ளனர். எனவே அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

துப்பறியும் தலைமை கண்காணிப்பாளரான மார்கஸ் பார்னெட் இதுக்குறித்து கூறும்போது தனது அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்களால் தான் விரக்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 விதிமுறைகளை தனது துறை அதிகாரிகளே மீறியது மிகுந்த ஏமாற்றத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. முடி வெட்டுவதற்கு அதிகாரிகள் பணம் அளித்த போதிலும் இப்படி கொரோனா பரவலுக்கு காரணமான விஷயங்களுக்கு துணை போனதன் காரணமாக அவர்களை மன்னிக்க முடியாது என அவர் கூறினார்.

மேலும் அவர் “சட்ட ஒழுங்கை மீறி பொறுப்பற்ற முறையில் நடக்கும் அதிகாரிகள் மீது தண்டனைகள் மற்றும் அபராதங்கள் வழங்க தயாராக இருக்கிறோம்” என அவர் கூறினார். அதன் பிறகு அந்த காவல்துறை அதிகாரிகளுக்கு அபராத அறிவிப்புகள் வழங்கப்பட்டன.

இதற்கு முன்பு இதே போல பொது முடக்கத்தின் போது ஒன்றாக காலை உணவை உண்டதற்காக அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் தலா 200 யூரோ அபராதம் அளிக்கப்பட்ட நிகழ்வும் லண்டனில் நிகழ்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக