நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐயின் துணை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், யோனோ வணிக பயன்பாடானது. குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
வடகிழக்கு நகரங்கள் உட்பட அடுக்கு மூன்று மற்றும் நான்கு நகரங்களில் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
இது டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை மேம்படுத்த உதவும் என்றும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா துணை நிறுவனமான, எஸ்பிஐ பேமெண்ட்ஸ் வணிகர்களுக்கு குறைந்த கட்டண டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பை வழங்க யோனோ வணிகர் பயன்பாட்டை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த யோனோ வணிக பயன்பாடு நாட்டில் வணிகர்களின் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
நாட்டின் மில்லியன்கணக்கான வணிகர்கள் மொபைல் அடிப்படையிலான டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்க, குறைந்த கட்டண கட்டமைப்பை மீட்டெடுப்பதே எஸ்பிஐ-யின் திட்டம் என்று இவ்வங்கி தெரிவித்துள்ளது. இதன் கீழ் அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாடு முழுவதும் சில்லறை மற்றும் பணிகளை மேற்கொள்ளும் இரண்டு கோடி வாடிக்கையாளர்களை இணைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக