Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

மழை கீழே வரும் போது.. இது மேலே வரும்.. என்னவா இருக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------

சிதறடிக்கும் ஜோக்ஸ்...!!

----------------------------------------------------

 

பாபுவும், நண்பர்களும் தங்கள் இன்னொரு நண்பனின் திருமணத்துக்காக முன்பின் அறியாத ஒரு ஊருக்கு காரில் பயணமானார்கள்.. வழி தெரியாமல் பல இடங்கள் சுற்றி அலைய பெட்ரோல் தீரும் நிலைக்கு வந்துவிட்டது. சரியாக வழி விசாரிக்கத் தெரியவில்லை என்று பாபு தன் நண்பர்களை கடிந்து கொண்டார். எனவே வழி விசாரிக்கும் பொறுப்பை பாபுவிடம் ஒப்படைத்து விட்டார்கள்.. வழியில் ஒரு கிராமவாசியைப் பார்த்த பாபு தன் நண்பர்களை ஒரு லுக் விட்டபடியே விசாரித்தார்..

 

பாபு : ஏம்பா.. கொஞ்சம் நில்லு.. வெட்டுவாங்கேணிக்கு சீக்கிரமா போற வழி எது..? சட்டுன்னு சொல்லு..

வழிபோக்கன் : வெட்டுவாங்கேணியா..? எப்படிப் போகப் போறீங்க.. நடந்தா.. கார்லயா..?

பாபு : கார்லதாம்பா..

வழிபோக்கன் : கார்லயா.. அப்ப அதுலேயே போயிருங்க.. சீக்கிரமாப் போயிரலாம்..!

பாபு : 😖😖

----------------------------------------------------

 

மன்னன் : எதிரி நாட்டு மன்னனின் அறைக்கூவலை இனிமேலும் நம்மால் பொறுத்துக்கொள்ள இயலாது மந்திரியாரே!

மந்திரி : போருக்குத் தயாரென ஓலை அனுப்பட்டுமா மன்னா?

மன்னன் : வேண்டாம் அறைக்கூவல் கேட்காவண்ணம் சவுண்ட் புரூஃவ் சிஸ்டம் அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்.

மந்திரி : 😳😳

----------------------------------------------------

குறளும்... பொருளும்...!!

----------------------------------------------------

 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல் எனும் சொல்.

 

பொருள் :

 

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைமாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

----------------------------------------------------

புதிர் கேள்விகள்...!!

----------------------------------------------------

1. மழை கீழே வரும் போது, இது மேலே வரும். அது என்ன?

 

2. இதை வாங்கும் போது கருப்பாக இருக்கும். உபயோகிக்கும் போது சிவப்பாக இருக்கும். உபயோகித்த பின் வெள்ளையாக மாறிவிடும். அது என்ன?

 

3. இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான். அவன் யார்?

 

4. நான் ஒரு சிறிய வீட்டுக்குள் தனியாக வசிப்பேன். என்னுடைய வீட்டில் கதவுகளும் இல்லை. ஜன்னலும் இல்லை. வீட்டின் சுவற்றை உடைத்தால்தான் என்னால் வீட்டை விட்டு வெளியே வர முடியும். நான் யார்?

 

விடை :

 

1. குடை 

 

2. அடுப்புக் கரி

 

3. மேகம்

 

4. கோழிக்குஞ்சு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக