Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 8 ஏப்ரல், 2021

கட்டி வெச்சு, நிர்வாணமாக்கி அறுப்பேன் - வேட்பாளர் ஆத்திரம்

 

மை இந்தியா பெண் வேட்பாளருக்கு ஆபாச வீடியோவை அனுப்பியவரை கைது செய்யக்கோரி நடந்த போராட்டம்

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் வீரலட்சுமி (35). இவர் தமிழர் முன்னேற்ற படையின் தலைவராக உள்ளார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் மை இந்தியா கட்சி சார்பில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டார். அதற்காக கடந்த மாதம் 17ம் தேதி அன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துளள்ளார் வீரலட்சுமி. இந்நிலையில் அவரது வாட்சப் எண்ணிற்கு மர்ம நபர் ஒருவர்  ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த வீரலட்சுமி அந்த எண்ணை தொடர்பு கொண்டு கண்டித்துள்ளளார். ஆனாலும், அந்த எண்ணிலிருந்து தொடர்ந்து ஆபாச படங்கள் வந்துள்ளன. இதனையயடுத்து, வீரலட்சுமி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டார்.

அந்த வீடியோவில், '' எனக்கு ஆபாச படங்களை அனுப்பியவர்களை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நானே கண்டுபிடித்து தூக்கிட்டு வந்து பல்லாவரம் சந்தையில் நிர்வாணமாக கட்டி வைத்து ஆணுறுப்பை இருப்பேன் '' என கூறி வீடிய வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், வீரலட்சுமி அளித்த புகாரில் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் தேர்தல் நாளான ஏப்ரல் 6 அன்று மீனம்பாக்கம் அருகே உள்ள செல்போன் டவரில் எரிய வீரலட்சுமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும், டவரில் இருந்தவாறு லைவ் வீடியோவும் வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார். சம்பவம் அறிந்து வந்த போலீசார் வீரலட்சுமியிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தனர். பின்னர், ஆபாச படங்களை அனுப்பியவர்களை பற்றி விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்களை உடனே கைது செய்வோம் எனவும் போலீசார் உறுதி அளித்தனர். பெண் வேட்பாளருக்கு மர்ம நபர்கள் ஆபாச படங்களை அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக