Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 10 அக்டோபர், 2019

சென்னை: நாளைக்கு எந்தெந்த ரூட்டுல, எப்போலாம் போகக்கூடாது?

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


காஞ்சிபுரத்தில் நாளை தொடங்கும் 2வது முறைசாரா மாநாட்டில் பங்கேற்கச் சென்னை வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பாதுகாப்பு கருதி சென்னை போக்குவரத்தில் பல்வேறு மாற்றக்களை சென்னை காவல்துறை செய்துள்ளது.



சென்னை: நாளைக்கு எந்தெந்த ரூட்டுல, எப்போலாம் போகக்கூடாது?
ஹைலைட்ஸ்
  • இந்த போக்குவரத்து மாற்றம் 11 மற்றும் 12ஆம் தேதிகளுக்கானது
  • சீன அதிபர் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் பங்கேற்கும் 2வது முறைசாரா மாநாடு நாளை தொடங்கி நாளை மறுதினம் வரை நடக்கிறது. இந்த மாநாட்டையொட்டி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னைக்குத் தனி விமானம் மூலம் 11ஆம் தேதி மதியம் 1:30 மணிக்கு வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு ஓய்வு எடுக்கிறார். அதன்பின் மாமல்லபுரத்தில் மாலை தொடங்கும் முறைசாரா மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பின் மாநாட்டை மறுநாள் முடித்துக் கொண்டு, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நேபாளம் புறப்படுகிறார். சீன அதிபரின் வருகையையடுத்து, 11 மற்றும் 12ஆம் தேதிகளில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களைப் போக்குவரத்து காவல்துறை செய்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

11 மற்றும் 12ஆம் தேதிகளில் ஜிஎஸ்டி சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணா சாலை (கத்திபாரா முதல் சின்ன மலை வரை), சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

 
இதைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட சாலையில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளவும்.

கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் 11ஆம்(நாளை) தேதி காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மற்றும் 12ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் பயணிக்க அனுமதியில்லை.

 
11ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் விவரம்- ஜிஎஸ்டி சாலை
மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை, பெருங்குளத்தூரிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜிஎஸ்டி சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் "0" பாயின்ட் சந்திப்பிலிருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும். மேலும் சென்னை தென்பகுதியிலிருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் ரோடு வழியாக , குரோம்பேட்டை - தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையைப் பயன்படுத்திச் செல்லலாம்.


பல்லாவரம் ரேடியல் சாலை
மதியம் 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஜிஎஸ்டி சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் கத்திப்பாரா சந்திப்பிலிருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாமல், 100 அடி சாலை வழியாகச் செல்ல திருப்பிவிடப்படும்.

மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை, ராஜீவ் காந்தி சாலையில் (ஒஎம்ஆர்) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாகச் செல்ல திருப்பிவிடப்படும். மேலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

12ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் விவரம்- ஓஎம்ஆர்
காலை 7.30 மணி முதல் 2 மணி வரை, ராஜீவ் காந்தி சாலையில் (ஒஎம்ஆர்) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாகச் செல்ல திருப்பிவிடப்படும்.

கிழக்கு கடற்கரைச் சாலை
காலை 7 மணி முதல் மதியம் 1.30 மணி வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. தேசிய விருந்தினராகச் சென்னைக்கு வரும் முக்கிய பிரமுகரின் இந்தியப் பயணம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் அமைந்திடப் பொதுமக்கள் காவல் துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக