---------------------------------------------------------------------
கலக்கலான காமெடி...!!
---------------------------------------------------------------------
பாபு : என்ன இது செருப்ப எல்லாம் செவுத்துல ஆணி அடிச்சு மாட்டி வெச்சிருக்கீங்க?
கோபு : சண்ட நேரத்துல கீழ குனிஞ்சு எடுக்க சிரமமா இருக்குன்னு என் மனைவி தான் இப்படி மாட்டி வெச்சிருக்கா...
பாபு : 😅😅
---------------------------------------------------------------------
ரமேஷ் : நேத்து சாயங்காலம் போன் பண்ணேன் ஏன்டா எடுக்கல?
சுரேஷ் : நான் வீட்டுக்கு போன உடனே என் பொண்டாட்டி சைலண்ட் மோட்ல போட்ருவா... அதான்.
ரமேஷ் : உன்னோட மொபைல உன் பொண்டாட்டி ஏன்டா சைலண்ட் மோடுல போடணும்?
சுரேஷ் : மொபைல இல்லடா... என்னையவே சைலண்ட் மோடுல போட்ருவா...
ரமேஷ் : 😂😂
---------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
---------------------------------------------------------------------
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
பொருள் :
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
---------------------------------------------------------------------
மாவட்டங்களும்... சிறப்புகளும்...!!
---------------------------------------------------------------------
காஞ்சிபுரம் - கோயில்கள், பட்டு புடவைகள்.
செங்கல்பட்டு - ஏரிகள், வேடந்தாங்கல், மாமல்லபுரம் சிற்பங்கள்.
தர்மபுரி - ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி.
சேலம் - எஃகு, மா, மேட்டூர் அணை, ஏற்காடு.
ஈரோடு - மஞ்சள், கோதாவரி அணை, பவானி ரூ கொடுமுடி கோயில்கள்.
---------------------------------------------------------------------
நான் யார்?
---------------------------------------------------------------------
1. எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?
.
.
.
.
.
📘புத்தகம்.
2. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது, இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?
.
.
.
.
.
🗾வரைபடம்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக