Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 28 மே, 2021

சுந்தர் பிச்சை அண்ணே! உங்களுக்கு கூட்டு சேர வேற ஆளே கிடைக்கலையா!?


கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் கூட்டு சேர்த்து உருவாக்கும் மலிவு விலையிலான 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய தகவலை சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார். எப்போது அறிமுகமாகும், இதன் பின்னால் உள்ள வியாபார தந்திரங்கள் என்ன, இதோ முழு விவரங்கள்.

கடந்த ஆண்டு நடந்த, கூகுள் ஃபார் இந்தியா மெய்நிகர் நிகழ்வில், கூகுள் நிறுவனம் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து புதிய மலிவு விலையில 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வரும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த கூகுள்-ஜியோ ஒத்துழைப்பின் விளைவாக வரவிருக்கும் ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் விவரங்களை இப்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை வெளிப்படுத்தி உள்ளார்.

ஆசிய பசிபிக் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிருபர்களுடனான ஒரு மெய்நிகர் மாநாட்டின் போது, வாக்குறுதியளிக்கப்பட்ட “மலிவு” விலை ஸ்மார்ட்போனைக் கொண்டுவர கூகுள் நிறுவனம் தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக பிச்சை குறிப்பிட்டார்.

"நாங்கள் ஒரு மலிவு விலை ஸ்மார்ட்போனை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்... திட்டத்தில் முன்னேற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், நாங்கள் அவர்களுடன் (
ஜியோ) பணியாற்றி வருகிறோம்" என்று சுந்தர் பிச்சை குறிப்பிட்ட மெய்நிகர் சந்திப்பின் போது கூறினார்.

ஆக.. ஜியோ 5ஜி போன் வேலையில் உள்ளது; சரி எப்போது அறிமுகமாகும்?

தற்போது வரை, கூகுள்-ஜியோ கூட்டணியின் கீழ் உருவாகும் மலிவு விலை ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்து எந்த விவரங்களும் இல்லை. இருப்பினும் அது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ தனது 5ஜி நெட்வொர்க்கை நாட்டில் அறிவிக்கும்போது குறிப்பிட்ட ஸ்மார்ட்போனை வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நினைவூட்டும் வண்ணம், இந்த தொலைதொடர்பு ஆபரேட்டர் தற்போது நாட்டின் சில பகுதிகளில் அதன் 5ஜி நெட்வொர்க்கை சோதித்து வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே நாட்டில் சில 4 ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறது, அதில் மிகவும் சமீபத்தியது - ஜியோபோன் 2 ஆகும், இது பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.


ஜியோ போன் மற்றும் ஜியோபோன் 2 உடன், ரிலையன்ஸ் நிறுவனம் மக்களுக்கு மலிவு விலையிலான 4 ஜி ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதே பாணியை ஜியோ நிறுவனம் அதன் 5ஜி சேவையின் கீழும் பின்பற்றும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதாவது 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்து, பின்னர் மலிவு விலையிலான 5ஜி ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்து, மக்களை மிகவும் எளிதாக 5ஜி சேவைக்குள் நகர்த்தும்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடக்கவுள்ள வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) 2021-இல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூறப்படும் ஜியோ-கூகுள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடத்தில் ரிலையன்ஸ் 2021 ஆம் ஆண்டிற்கான ஏஜிஎம் நிகழ்வு தேதியை இன்னும் வெளியிடவில்லை.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையிலான லேப்டாப் ஒன்றில் செயல்படுவதாகவும், அது ஜியோபுக் என்று அழைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மலிவு விலையுள்ள ஜியோ லேப்டாப் ஆண்ட்ராய்டு ஓஎஸ் பதிப்பில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அது ஜியோஓஎஸ் என்று அழைக்கப்படலாம். மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 (எஸ்எம் 6125) மூலம் இயக்கப்படலாம். கூறப்படும் ஜியோ புக் லேப்டாப் ஆனது இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டுக்குள் தொடங்கப்படலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!