-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------

கணவன் வீட்டிற்குள் வந்ததை கண்டதும்..
மனைவி : வந்துட்டீங்களா.. உங்களைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்.
கணவன் : ஏன்? என்னாச்சு?
மனைவி : இன்னைக்கு ஒருத்தன் எங்க அப்பாவை திட்டிட்டான்... நானும் அவங்க அப்பாவை நல்லா திட்டிட்டேன்.
கணவன் : சரி...
மனைவி : இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது... அவ அப்பனோட மண்டைய உடைச்சாதான் எனக்கு நிம்மதி..
கணவன் : (கலவர பீதியில்) நமக்கெதுக்குமா இந்த வம்பு? மன்னிச்சு விட்டுட வேண்டியதுதான.
மனைவி : மன்னிக்கிறதா? அந்த பேச்சுக்கே இடமில்லை. எங்க அந்த உருட்டுக்கட்டை.. (என்று தேடிக்கொண்டே செல்ல) (வாசலிலிருந்து வந்த மகன்)
மகன் : அப்பா.. சீக்கிரம் ஓடிருப்பா..
அப்பா : ஏன்டா?
மகன் : நான்தான் கோவத்துல தாத்தாவ திட்டிட்டேன்.
அப்பா : அடப்பாவி மகனே! வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிக்கிட்டு அலைய வேண்டியதா இருக்கே.. அய்யோ நான் இப்ப என்ன செய்வேன்.. எங்க போவேன்.. செய்யாத குற்றத்துக்கு நாயா, பேயா அலைய வைக்கிறாங்களே...🏃🏃
-------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக